February 8, 2025, 8:49 PM
28.2 C
Chennai

பட்டப்பகலில் செயின் பறிப்பு, கொள்ளை முயற்சி… கிரைம் நியூஸ்!

crime-imgae
crime-imgae

அவனியாபுரத்தில் பட்டபகலில் பெண்ணிடம் செயின் பறிப்பு!

மதுரை டீசர் 30 அவனியாபுரத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் பட்டபகலில் செயின் பறித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

அவனியாபுரம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன் மனைவி தேவி 26 இவர் நேற்று மதியம் மீனாட்சி நகர் பகுதியில் நடந்து சென்றபோது மர்ம ஆசாமிகள் அவரை வழிமறித்து மிரட்டி அவர் அணிந்திருந்த இரண்டரைபவுன்மோதிரம் மற்றும்செயினை பறித்துச் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தேவி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறித்த ஆசாமியை தேடி வருகின்றனர்.


கீரைத்துறையில் கொள்ளை முயற்சியில் ஆட்டோவில் பதுங்கியிருந்த 2 பேர் கைது

மதுரை: ஆட்டோவில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

கீரைத்துறை சிந்தாமணி ரோடு பழைய செக்போஸ்ட் அருகே சந்தேகப்படும்படியாக ஆட்டோவில் சிலர் பதுங்கி இருப்பதாக கீரைத்துறைபோலீசாருக்கு தகவல் கிடைத்தது சப்-இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆட்டோவை சுற்றி வளைத்து ஆட்டோவில் இருந்தவர்கள் அனுப்பானடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன்மாதவன் 21 கீரத்துரை மூக்க நாடார் சந்து பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆனந்து 20 இவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர் .

அவர்களுடன் இருந்த முத்திருளாண்டிமற்றும் ஒருவர் தப்பி ஓடிவிட்டனர் போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்து சோதனை நடத்தியபோது ஆட்டோவில் பெரியவாள்ஒன்றும் ககத்தியும் இருந்தது .அவைகளையும் போலீசார்கைப்பற்றினர்.


நோய்வாய்ப்பட்ட மகனால் மனமுடைந்து தந்தை தற்கொலை

மதுரை: மகன் நோய்வாய்ப்பட்டதால்மனமுடைந்த தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பரங்குன்றம் ஆர்வி பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார் 56 இவரது மகன் மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.இதற்கான சிகிச்சை அளித்தும் அவருக்கு குணமடையவில்லை .

இதனால் மனமுடைந்து காணப்பட்ட செல்வகுமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


சளி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவன் மரணம்!

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் சளி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம்சோலை அழகுபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் அவரது 8 வயது மகன் கௌதம்.இவருக்கு சளி மற்றும் காய்ச்சல் இருந்தது காலில் காயமும்ஏற்பட்டிருந்தது .இந்த நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .

ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் சிறுவன் கவுதம் பரிதாபமாக உயிர் இழந்தார் இந்த சம்பவம் தொடர்பாக ஜெய்ஹிந்துபுரம்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

Topics

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

பஞ்சாங்கம் பிப்.06 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

Entertainment News

Popular Categories