சுபாஷிதம்: நட்புக்குத் தேர்வுகள்!

subhashitam_1-2
subhashitam_1-2

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

75. நட்புக்குத் தேர்வுகள்!

ஸ்லோகம்:

யதா சதுர்பி: கனகம் பரீக்ஷ்யதே
நிகர்ஷண – ச்சேதன – தாப – தாடனை: |
ததா சதுர்பி: புருஷ: பரீக்ஷ்யதே 
த்யாகேன சீலேன குணேன கர்மணா ||

பொருள்:

தங்கத்தை சோதிப்பதற்கு நான்குவித சோதனைகள் செய்வர். உரைகல்லின் மீது உரசிப் பார்ப்பார்கள். துண்டுகளாக வெட்டுவார்கள். சூடாக்குவார்கள். சுத்தியால் தட்டுவார்கள். அதேபோல் மனிதர்களின் நல்ல குணத்தை நான்கு விதங்களில் சோதித்து அறியவேண்டும். அவனுடைய தியாக குணம், நடத்தை, பழக்க வழக்கங்கள், பிறருக்கு உதவும் குணம்… இவற்றைக் கொண்டு தேர்ந்தெடுக்கவேண்டும். பின்னரே நட்புக் கொள்ள வேண்டும்.

விளக்கம்:

ஏதாவது பொருள் வாங்க வேண்டும் என்றால் அவற்றின் நாணயத்தை சோதிப்போம். அப்படி இருக்கும்போது நல்ல நண்பனைத் தேர்ந்தெடுக்கையில் எந்த சோதனைகள் தேவை என்று தெரிவிக்கும் சுலோகம் இது. 

நாம் ஏதாவது நிறுவனத்தில் சேர எண்ணினால் அவற்றின் நல்லது கெட்டதுகளைப் பற்றி விசாரிப்போம் அல்லவா? 

பரிச்சயம் உள்ளவர்கள் எல்லோரும் நண்பர்களாக முடியாது. கஷ்டப்படும்போது உதவி அளித்து ஆறுதல் கூறுபவரே உண்மையான நண்பர். ஒரு வாகனம் வாங்க வேண்டும் என்றால் அதனை சோதனைக்கு உட்படுத்துவோம் அல்லவா? ஆபத்தில் உதவுபவனே நண்பன். காலத்தின் சோதனையில் தேர்ச்சி பெறுபவர்களே நிலையான நண்பர்கள். நம்பிக்கை ஏற்பட வேண்டுமென்றால் இந்த சோதனைகளில் வெல்வது முக்கியம். 

வெவ்வேறு கோணங்களில் பரிசீலித்து,  நம் அனுபவத்தைத் துணை கொண்டு  ஒருவர் மீது அபிப்ராயம் ஏற்படுத்திக் கொள்வோம். தங்கம் போன்ற நண்பர் யார் என்பது அப்போதுதான் புரியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories