சுபாஷிதம்: நட்புக்குத் தேர்வுகள்!

Published:

subhashitam_1-2
subhashitam_1-2

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

75. நட்புக்குத் தேர்வுகள்!

ஸ்லோகம்:

யதா சதுர்பி: கனகம் பரீக்ஷ்யதே
நிகர்ஷண – ச்சேதன – தாப – தாடனை: |
ததா சதுர்பி: புருஷ: பரீக்ஷ்யதே 
த்யாகேன சீலேன குணேன கர்மணா ||

பொருள்:

தங்கத்தை சோதிப்பதற்கு நான்குவித சோதனைகள் செய்வர். உரைகல்லின் மீது உரசிப் பார்ப்பார்கள். துண்டுகளாக வெட்டுவார்கள். சூடாக்குவார்கள். சுத்தியால் தட்டுவார்கள். அதேபோல் மனிதர்களின் நல்ல குணத்தை நான்கு விதங்களில் சோதித்து அறியவேண்டும். அவனுடைய தியாக குணம், நடத்தை, பழக்க வழக்கங்கள், பிறருக்கு உதவும் குணம்… இவற்றைக் கொண்டு தேர்ந்தெடுக்கவேண்டும். பின்னரே நட்புக் கொள்ள வேண்டும்.

விளக்கம்:

ஏதாவது பொருள் வாங்க வேண்டும் என்றால் அவற்றின் நாணயத்தை சோதிப்போம். அப்படி இருக்கும்போது நல்ல நண்பனைத் தேர்ந்தெடுக்கையில் எந்த சோதனைகள் தேவை என்று தெரிவிக்கும் சுலோகம் இது. 

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

நாம் ஏதாவது நிறுவனத்தில் சேர எண்ணினால் அவற்றின் நல்லது கெட்டதுகளைப் பற்றி விசாரிப்போம் அல்லவா? 

பரிச்சயம் உள்ளவர்கள் எல்லோரும் நண்பர்களாக முடியாது. கஷ்டப்படும்போது உதவி அளித்து ஆறுதல் கூறுபவரே உண்மையான நண்பர். ஒரு வாகனம் வாங்க வேண்டும் என்றால் அதனை சோதனைக்கு உட்படுத்துவோம் அல்லவா? ஆபத்தில் உதவுபவனே நண்பன். காலத்தின் சோதனையில் தேர்ச்சி பெறுபவர்களே நிலையான நண்பர்கள். நம்பிக்கை ஏற்பட வேண்டுமென்றால் இந்த சோதனைகளில் வெல்வது முக்கியம். 

வெவ்வேறு கோணங்களில் பரிசீலித்து,  நம் அனுபவத்தைத் துணை கொண்டு  ஒருவர் மீது அபிப்ராயம் ஏற்படுத்திக் கொள்வோம். தங்கம் போன்ற நண்பர் யார் என்பது அப்போதுதான் புரியும்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img