கருணாநிதி சிலைத் திறப்பில் பங்கேற்கவில்லை: கமல் அதிரடி முடிவு!

Published:

07 June03 Kamal e1542363649134 - 2026

சென்னை : தமிழக முன்னாள் முதல்வரும் திமுக.,வின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் தாம் பங்கேற்கப் போவதில்லை என மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் அறிவித்துள்ளார்.

கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக ஏற்கெனவே கமல் நேரம் ஒதுக்கி உள்ளதால், அவற்றில் கலந்து கொள்ள மதுரை செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் நடைபெறும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு, நாளை மீண்டும் கமல் சென்னை திரும்புகிறார்.

முன்னதாக, திமுக.,வுடன் கமல் கூட்டணி வைத்துள்ளதாகவும், அவருக்கு கூட்டணியில் 2 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. அதை கமல் அவசரமாக மறுத்ததுடன், தாம் கட்சி தொடங்கிய நோக்கம் என்ன என்பதை அனைவரும் அறிவார்கள் என்றும் டிவிட்டரில் குறிப்பிட்டார்.

கருணாநிதி சிலைத் திறப்பில் பங்கேற்க வருமாறு திமுக., சார்பில் முன்னரே அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. அதில் கமலும் கலந்து கொள்வதாகக் கூறி இருந்தார்.. ஆனால், திடீரென அந்த முடிவை மாற்றிக் கொண்டு, கட்சி சார்ந்த நிகழ்ச்சிக்கு மதுரைக்குச் செல்கிறார் கமல். எனவே கமலின் இந்த திடீர் முடிவுக்கு கூட்டணி விவகாரத்தில் தாம் வலிய வந்து சிக்கிக் கொள்ள விரும்பாததே காரணம் என்று கூறப் படுகிறது.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img