அரசு செலவு சிலைக்கு உயிர் இருக்காது! சொந்த செலவுல வெச்சா அதுக்கு உயிர் இருக்கும்!

karunanidhi statue - 2026

அரசு செலவில் சிலை வைத்தால் அதற்கு உயிர் இருக்காது. அது பொதுமக்கள் வரிப்பணம். மக்களின் பணத்தில் சிலை வைத்தால் சிலைக்கு உயிர் இருக்காது. ஆனால், சொந்த செலவில் சிலை வைத்தால் அது அபிமானம். அபிமானத்தில் வைக்கும் சிலைக்கு உயிர் இருக்கும். இதுதான் பகுத்தறிவு!

இப்படிப் பட்ட கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றனர். அதற்குக் காரணம், திமுக.,வின் சிலை அரசியல்! பட்டேல் சிலைக்கு திமுக., விமர்சனம் செய்ய, கருணாநிதி சிலைக்கு பாஜக., விமர்சனம் செய்ய, சிலை அரசியல் வாக்குவாதங்கள் சமூக வலைத்தளங்களில் நிரம்பிக் கிடக்கிறது!

இன்று திமுக., கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் திமுக., தலைவராக இருந்த கருணாநிதியின் சிலைத் திறப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. கருணாநிதி உருவச் சிலையை இன்று திறந்து வைக்கிறார் காங்கிரஸ் தலைவியாக இருந்த சோனியா காந்தி

இந்த நிகழ்ச்சியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையும், புதுப்பிக்கப்பட்ட அண்ணா சிலையும் இன்று திறக்கப்படவுள்ளன.

இதன் பின்னர், ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் மாலையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் சென்னைக்கு வருகின்றனர்.

ராகுல், சோனியாஆகியோர் மாலை 3.30 மணி அளவில் தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகின்றனர்.

இந்த சிலைத் திறப்பு நிகழ்ச்சிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்கிறார். கருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்து வைக்கிறார்.

இதற்காக அண்ணா அறிவாலயத்திலும், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சென்னை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

2 COMMENTS

  1. சொந்த செலவில் வைத்த சிலைக்கு உயிர் இருந்தால் அதற்கு திட உணவா? அல்லது திரவ உணவா ? அல்லது குளுகோஸா என்று அடுத்த கேள்வி வராதா? தப்பு தப்பா வியாக்கியானம் கொடுத்து விட்டு தப்பி விட முடியாது.

  2. உயிர் இருக்கும் என்றால் எப்படி சிலையாகும். என்னே பகுத்தறிவின் விந்தை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories