December 6, 2025, 7:42 AM
23.8 C
Chennai

அன்புத் தம்பி ஸ்டாலினுக்கு…

karunanidhi letter - 2025

அன்பு தம்பி ஸ்டாலினுக்கு,

இன்று எனது சிலை திறப்பு விழா என நீ தினமும் என் சமாதியில் வைக்கும் முரசொலி மூலம் அறிந்தேன்…என் சிலை திறப்பு விழாவில் நான் இல்லையே என்ற வருத்தம் ஒரு புறம் இருந்தாலும் இந்த விழாவுக்கு “லட்சக்கணக்கான ஈழ தமிழர்கள் சாவுக்கு காரணமாக இருந்த” என தமிழகமே ஓலமிட்ட, நான் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என அறிவித்த சோனியாவை வைத்து என் சிலையை திறப்பது மெத்த மகிழ்ச்சி…

நம்மை ஆட்சி கட்டிலில் அமரவிடாத சோற்றாலடித்த பிண்டங்களாகிய தமிழக மக்களுக்கு ஈழம், தமிழர் படுகொலை என்பதெல்லாம் நிச்சயம் மறந்து போயிருக்கும்…மறதி திராவிட வியாதி அல்லவா…பழையதை தமிழகம் நினைவு வைத்திருந்தால் கழகம் எப்படி மறுபடி மறுபடி ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருக்கும்…

நிற்க..

உனக்கு துண்டு சீட்டில் எழுதி தந்ததை மட்டுமே படிக்கவும்.. நீ மேடைகளில் பேசும் போது சொந்தமாக பேசுகிறேன் என்ற அவாவில் ஆக என்பதை தவிர மற்றவற்றை தப்பும் தவறுமாக பேசுகிறாயாம்… பழமொழிகளை முற்றிலும் தவிர்க்கவும்… உனக்கு தெரியாததை பேசாதே.. உனக்கு எதுவுமே தெரியாது என்பதையும் அறிந்தவன் நான் .. அதற்கு தான் அன்பு தம்பி வைகோ இருக்கிறானே.. அவன் பேசட்டும் ..அதற்காக அவனுக்கு டீ மட்டும் வாங்கி கொடு… அது போதும்..!

அடுத்து, நீ வைத்த சிலையில் கை நீளமாக இருப்பதாக தகவல்கள் கண்டேன்…காற்றிலும் காசு பார்த்த நமக்கு சட்டை பையையும் பெரியதாக வைத்திருக்கலாம்… அடுத்து இனி சிலைகள் வைக்கும் போது மறக்காமல் பையை பெரிதாகவே வைக்கவும்…

செந்தில் பாலாஜி, வைகோ திருமா போன்றவர்கள் உன்னை துணை பிரதமராக அமர வைக்க உள்ளதாக அறிந்தேன்… இவர்களை வைத்துக் கொண்டு முதல்வர் பின்பு இந்திய துணை கண்டத்தின் துணை பிரதமர் ஆக முயலும் உன் ராஜதந்திரம் அறிந்து மெச்சினேன்.. ” குட்டி பதினாறு” என நீ நிருபிப்பதை அறிந்து பெருமிதம் கொள்கிறேன்… தேர்தல் காலங்களில் இவர்களுக்கு இதயத்தில் இடம் தந்து சிறப்பிப்பேன் . .அதையே நீயும் செய்து விடு….

கழக உடன்பிறப்புகளே.. இந்த சிலை திறப்பு விழாவுக்கு நான் உங்களுக்கு விடுக்கும் செய்தி….

கடும் சவால்கள் உன் முன் உள்ளது.. மூன்றாம் கலைஞர் உதயநிதியை அடுத்த தலைமுறை தலைவராகவும், நான்காம் கலைஞர் உதயநிதி மகனை அடுத்த தலைவராக உயர்ததவும், கனிக்கு மத்திய மந்திரி பதவியும் பெற்றுத் தர வேண்டிய பெரும் பொறுப்பு உன் முன் உள்ளது.. பெரியார், அண்ணா தந்த கொள்கைகளைத் தாங்கி உள்ள உடன்பிறப்புகளே… கழகமே குடும்பம், குடும்பமே கழகம் என்பதை மனதில் கொண்டு, கடமை கண்ணியம், கட்டுப்பாட்டுடன் தந்த பணி செய்து முடித்து, பெரும் பகை தீர்த்து என்னிடம் உள்ள அண்ணாவின் இரவல் இதயம் மகிழ கழகப் பணி ஆற்றுவாயாக…

அன்புடன் 
மு.க ..

  • புகழ் மச்சேந்திரன் புகழ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories