மரத்தின் மீது கார் மோதி விபத்து : கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் பலி

 
கடலூர் மாவட்டம் அருகே நேற்று மரத்தின் கார் மோதி ஏற்ப்பட்ட விபத்தில் கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள நடுவீரப்பட்டு வான்ராசன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவரின் மகன் வெங்கட்ராமன் மேட்டூரில் உள்ள தனியார் தொழிநுட்ப்ப கல்லூரியில் படித்து வருகிறார்.
பொங்கல் பண்டிகை மற்றும் சி.என்.பாளையத்தில் நடைபெறும் மலைப் பிள்ளையார் கோயில் விழாவில் பங்கேற்பதற்காக, வெங்கட்ராமன் சொந்த ஊருக்கு வந்தார்.
அவருடன், கல்லூரியில் பயிலும் நண்பர்களான ஈரோட்டைச் சேர்ந்த முனியன் மகன் தினகரன் (20), திருச்செங்கோட்டைச் சேர்ந்த முருகன் மகன் மோகன் (20), சென்னையைச் சேர்ந்த லோகேஸ்வரன் (21), திருவள்ளூர் மாவட்டம், ராமபுரத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் திவாகர், மேட்டூரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் கார்த்திக் (21), கெளரிசங்கர் ஆகியோரும் வந்திருந்தனர்.
வெங்கட்ராமன் தனது காரில் கல்லூரி நண்பர்கள் மற்றும் சி.என்.பாளையம் புத்திரன்குப்பத்தைச் சேர்ந்த தண்டபாணி மகன் சசிக்குமார் (20), சொக்கநாதன்பேட்டை சம்மந்தம் மகன் முத்து (20) ஆகியோருடன் சனிக்கிழமை காலை புறப்பட்டார். கடலூர் மற்றும் சில இடங்களுக்குச் சென்றவர்கள் மதியம் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
பாலூரை அடுத்துள்ள குச்சிப்பாளையம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.
இதில் காரிலிருந்த வெங்கட்ராமன், தினகரன், மோகன், லோகேஸ்வரன், கெளரிசங்கர், திவாகர், சசிக்குமார், முத்து ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லேசான காயத்துடன் கார்த்திக் உயிர் தப்பினார்.
விபத்து குறித்து தகவலறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயக்குமார், மற்றும் காவல் துறையினர் போலீஸார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
கார் உருக்குலைந்ததால் சடலங்கள் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. காரை உடைத்து சடலங்களை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories