அதிமுகவினரின் விளம்பரக் கலாச்சாரத்தோடு எந்தக் கட்சியும் கனவிலும் போட்டி போட முடியாது : திமுக

 
விளம்பரக் கலாச்சாரம் குறித்து திமுகவினருக்கு அக்கட்சியின் தலைமை “அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகும்” என்ற தலைப்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
திமுகவினருக்கு அந்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது :-.
2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற அ.தி.மு.க. வினர் கடைப் பிடித்து வரும் விளம்பர முறைகள், போக்குவரத்து நெருக்கடியையும் பாதசாரிகளுக்கு இடைஞ்சலையும் ஏற்படுத்தி, அரசியல் விளம்பரமே ஆதிக்கச் சக்திகளின் ஆக்கிரமிப்பு தான், வெற்றுச் செல்வாக்குக்கான அத்துமீறல் மற்றும் மலிவான தந்திரம் தான் என்ற வெறுப்பையும், கோபத்தையும் மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றன.
 
31-12-2015 அன்று சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. வின் பொதுக்குழுவையொட்டி, ஜெயலலிதா வசிக்கும் போயஸ் தோட்ட மாளிகை முதல், திருவான்மியூரில் நிகழ்ச்சி அரங்கம் வரை சுமார் 12 கிலோ மீட்டர் துhரத்திற்கு சாலைகளின் இரு மருங்கிலும், நடுவிலும் மூன்று வரிசைகளில் ஜெயலலிதாவுக்காக வைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான விளம்பர சாதனங்கள், அ.தி.மு.க. அறிமுகப்படுத்தியுள்ள விளம்பரக் கலாச்சாரத் தின் உச்சம்; எந்த அளவுக்கு இந்த விளம்பரங்கள் பொதுமக்களிடம் முகச் சுளிப்பையும் முணுமுணுப்பையும் ஏற்படுத்தின என்பதை நடுநிலை நாளேடுகள் படம் பிடித்துக் காட்டியிருந்தன.
 
சாலைகளை மறிக்கும் பேனர்களில் தொடங்கிய அதிமுக வின் விளம்பரக் கலாச்சாரம் ஜெயலலிதா ஸ்டிக்கர் வரை சென்று விட்ட கொடுமையைப் பார்த்துக் கண்டிக்காதவர்கள் இல்லை; தரம் தாழ்ந்த இந்த நிலை எண்ணிக் கைகொட்டிச் சிரிக்காதார் இல்லை. இனி எந்தக் கட்சியும் அ.தி.மு.க. வினரின் விளம்பரக் கலாச்சாரத்தோடு போட்டி போடக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு, அது மிகவும் கீழே தாழ்ந்து அரசியலில் தலைகுனிவை உண்டாக்கி விட்டது.
 
அ.தி.மு.க. விலாவது, இப்படிப்பட்ட கட் அவுட்களை, அவர்களுடைய தலைவிக்கு மட்டுமே வைப்பதோடு நிறுத்தி விடுகிறார்கள். ஆனால் நம்முடைய கழகத்திலே உள்ள சிலர், தங்கள் தங்கள் கட் அவுட்களை, பேனர்களை, ப்ளக்ஸ் போர்டுகளை ஆங்காங்கு வைத்துக் கொள்வதில் நாட்டம் காட்டி வருவதால், அது பொதுமக்களிடம் பெருத்த வெறுப்பைத் தான் ஒட்டு மொத்தக் கழகத்திற்கும் உண்டாக்கி விடும்.
 
அதனால் தான் ஏற்கனவே ஒரு முறை கழகத் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருடைய உருவப் படங்களைத் தவிர வேறு யாருடைய உருவப் படங்களையும் கழக நிகழ்ச்சிகளுக்காக விளம்பரச் சாதனங்களை வைக்கும் போது, விளம்பரப்படுத்திக் கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டது.
ஆனால் அண்மைக் காலத்தில் இந்த நோக்கம் மறைந்து, நாமும் அது போல விளம்பரம் செய்து கொள்ளத் தொடங்குவதால், பொதுமக்களும், பொதுவாகச் சிந்திக்கக் கூடியவர்களும் நம்மையும் அ.தி.மு.க. வோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகி விடும் என்ற பழமொழியை யாரும் மறந்து விடக் கூடாது.
எனவே அத்தகைய போக்கினை கழகத்தினர் உடனடியாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டு என்று திமுகவினருக்கு அக்கட்சியின் தலைமைக் கழகத்தால் வெளியிடப் பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories