அதிமுகவினர் கொட்டத்தை அடக்குவோம் என மக்கள் கூறியதால் ஆத்திரம் : வட்டாட்சியரை வறுத்தெடுத்த செல்வி ராமஜெயம்!

 
தமிழக முன்னாள் அமைச்சரும் அதிமுக-வைச் சேர்ந்த புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் செல்வி ராமஜெயம் அநாகரீகமான கடுமையான தகாத வார்த்தைகளை பயன்படுத்தி கடலூர் வட்டாட்சியரை கைபேசி மூலம் திட்டிய ஒலிப்பதிவு வாட்ஸ் ஆப்பில் வெளியாகியுள்ளது
 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த வரலாறு காணாத கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடலூர் மாவட்டத்திலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பெரும்பாலான பொதுமக்கள் அவர்களது சொந்த உடமைகள் அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றனர்.
 
தமிழக அரசாங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு வெள்ள நிவாரணத் தொகையை இன்னும் வழங்கவில்லை எனும் குற்றச்சாட்டும் பல பகுதிகளில் நிலவி வருகிறது. மேலும் பொதுமக்கள் அதிமுக அரசாங்கத்தின்மீது கடும் கோபம் கொண்டுள்ளனர் .
 
இந்த நிலையில் அதிமுக-வை சேர்ந்த புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் செல்வி ராமஜெயம் நிவாரணத் தொகையை அரசிடம் இருந்து உடனடியாக பெற்றுத் தராத காரணத்தால் கடந்த சில தினங்களுக்கு முன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட பகுதியை சேர்ந்த மக்கள் அவரை நேரில் சந்தித்து அவரது அலட்சியமான, மெத்தனமான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
 
சட்டமன்ற உறுப்பினர் செல்வி ராமஜெயத்தை பார்த்து எதிர்ப்பு தெரிவிக்கச் சென்ற ஒரு சிலர், “மக்களின் வரிப்பணத்தை பல்வேறு முறைகேடு, அட்டகாசங்களை செய்து கொள்ளையடிக்கவே அதிமுக-வை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் சுற்றித் திரிவது எல்லாம் ஒரு பிழைப்பா?” என மறைமுகமாக மனம் வெறுத்து அர்ச்சனை செய்தாகவும் சொல்லப் படுகிறது.
 
மேலும், “அதிமுகவினரின் அட்டகாசத்தை ஒடுக்கும் வகையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவோம்” எனவும் கூறினாராம்.
அதனால் ஆத்திரம் அடைந்த செல்வி ராமஜெயம் அநாகரீகமான, கடுமையான, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி கடலூர் மாவட்ட வட்டாட்சியரை கைபேசி மூலம் அழைத்து திட்டியதாக அந்த மாவட்ட அதிமுக வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் கூறுகிறது.
 
 
கடலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கியதாக பல லட்சங்களை முறைகேடு செய்து சுருட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
 
கைபேசி மூலம் பேசியபோது வட்டாட்சியரை வறுத்தெடுத்த செல்வி ராமஜெயம் திட்டிய ஒலிப்பதிவு, அவரது புகைப்படம் இணைக்கப்பட்ட காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
 
ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

Entertainment News

Popular Categories