இந்தியாவின் நான்காவது தூண் என மார்தட்டி கொண்டுள்ள ஊடகங்கள் (ஒரு சில தவிர ) சுயநல நோக்கில் அரசியல்கட்சிகள் , வணிக நிறுவணங்கள் மற்றும் அரசாங்கதிற்கு ஆதரவு செய்திகளையே வெளியிட்டு வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .
இந்தியாவில் சமூக ஊடகங்கள் அறிமுகம் ஆன பின் ஊடகங்கள் மீதான நம்பிக்கையை இழந்து விட்டார்கள் என சொல்வது தான் சரியானதாக இருக்கும்.
ஊடகங்கள் மீது நம்பிக்கையை இழந்தவர்கள் பொது நல நோக்கத்தை கருத்தில் கொண்டு எதை கண்டும் அஞ்சாமல் மிக தைரியமாக லஞ்சம்.!! ஊழல்.!! அநீதி.!! குற்றங்களுக்கு எதிரான செய்திகளை சமூக ஊடகங்களை பயன்படுத்தி பலர் பதிவிட்டுகின்றனர்.
இந்த நிலையில் அரசியல் உண்மைகள் எனும் முகனூல் குழுவின் பக்கத்தில் ஜெயலலிதா மிக கடுமையாக விமர்சித்து அதிமுக அரசின் வேதனைகளை கூற 71 நாட்களும் போதாதது எனும் தலைப்பில் ஒரு பதிவை 28-01-2016 இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவை சுமார் 750க்கும் மேற்பட்டடோர் விரும்பி அதை பகிர்ந்துள்ளனர். மேலும் அந்த பதிவானது வாட்ஸ்ஆப்பிலும் வைரலாக பரவிவருகிறது .
அரசியல் உண்மைகள் எனும் முகனூல் குழுவின் பக்கத்தில்அரசின் வேதனைகளை கூற 71 நாட்களும் போதாதது எனும் பதவில் கூறியுள்ளதாவது :-
என் அரசின் சாதனைகள் கூற 36 நாட்கள் தேவை ஜெயலலிதா
மன்னிக்கவும் உங்கள் அரசின் வேதனைகளை கூற 71 நாட்களும் போதாதது:-
1, வெற்றி பெற்ற முதல் நாள் உங்கள் அரசு என்ற வார்த்தை மறுநாள் நான், எனது அரசு என்றானதே……
2 .சமச்சீர்கல்வியில் நீதிமன்றம் உங்கள் மூக்கை உடைத்தது.
3 , பாட புத்தகங்களை அச்சடித்து 450 கோடியை வீணடித்தது.
4, அண்ணா நூலகத்தை நாசபடுத்தியது .
5, கூடங்குளம் மக்களை ஏமாற்றியது.
6, பஸ் கட்டணம் உயர்தியது.
7, பால் விலையை உயர்த்தியது.
8, மின்சார கட்டணத்தை உயர்த்தியது.
9, கடுமையான மின் தட்டுபாடை ஏற்படுத்தியது.
10, ஒரு மின்உற்பத்தி நிலையம் கூட அமைக்காது.
11, தொழில் வளர்ச்சியை முடக்கியது .
12, தொழில் நிறுவணங்கள் தமிழகத்தை விட்டே ஒடியது.
13, சட்டசபையை ” பெஞ்ச் தட்டும் சபையாக ” மாற்றியது.
14, கரும்பு விவசாயிகளை கதற விட்டது .
14, நெல் விவசாயிகளை நெம்பியெடுத்தது.
15, கெயில் விவகாரத்தில் விவசாயிகளை வாட்டியது.
16, முல்லை பெரியாரில் மக்களின் முட்டியை உடைத்தது.
17, வில்லேஜ் & தாலுக் அலுவலங்களில் இலவசமாக வழங்கபட்ட சான்றிதழ்களை பணம் கட்டி பெற வைத்தது.
18, சாலைகளே இல்லா தமிழகத்தை உருவாக்கியது.
19, உலகமே வியக்கும் ஓட்டை உடைசல் பேருந்து!
20, அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றம் மண்டையில் கொட்டியது.
21, தானே புயலில் கடலூரை தவிக்க விட்டது.
22, எதிர்கட்சியை உடைத்தது.
23, கொடநாட்டில் உல்லாச வாசம்.
24, அரசு ஊழியர்களை தற்கொலை செய்ய வைத்தது.
25, பெண் புகாரில் சிக்கியவர்களை இடைத்தேர்தலில் நிறுத்தியது.
26, மீனவர்களை ஜெயிலில் தவிக்க விட்டது.
27, கச்சதீவு மீட்பை கனவாக்கியது.
28, படகுகளை பறிகொடுக்க வைத்தது.
29, மாற்றுதிரணாளிகளுக்கு மரண பயம் காட்டியது.
30, மக்கள் நல பணியாளர்களை மரணத்தை நோக்கி உந்தியது.
31, இலக்கு வைத்து மது விற்றது.
32, தமிழ்நாட்டு போலீஸை டாஸ்மாக் போலீஸாக்கியது.
33, காவல் துறையை ஏவல் துறையாக்கியது.
34, ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு போனது.
35, நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தது.
36, மந்திரிகள் மண் சோறு தின்றது.
37, ஊழலில் திளைப்பது.
38, தாது மணலை கொள்ளையடித்தது.
39, ஆவின் ஊழல் .
40, கமல்ஹாசனை கலங்கடித்தது.
41, விஜயை வியர்க்க வைத்தது .
42, சினிமா விழாவை சின்னாபின்னாமாக்கியது.
42, சகாயத்தை சுடுகாட்டில் படுக்க வைத்தது.
43, கனிமவளத்தை களவாடியது.
44, அப்துல் கலாமை அவமதித்தது.
45, ஊழல் IAS அதிகாரிகள் பட்டியல் வெளியானது.
46, 25 விதமான ஊழல் பட்டியல் வெளியானது.
47, முட்டை, பருப்பு என அனைத்திலும் ஊழல்.
48, மின்சாரத்தில் கமிஷன் .
49, மணல் கொள்ளை.
50, லோக் ஆயுத்தாவை அமல்படுத்தாதது .
51 , பத்திர பதிவு கட்டணத்தை உயர்த்தியது.
52, நிலங்களின் வழிகாட்டு மதிப்பை தாறுமாறாக உயர்த்தியது.
55, ஜல்லிகட்டை ஜடமாக்கியது.
56, தர்மபுரியில் குழந்தைகள் இறந்தது.
57, திருப்பதியில் தமிழர்கள் மீதான போலி என்கவுன்டர்.
58, பார்வையற்றவர்களை பரிதவிக்க வைத்தது.
59, செவிலியரை சொல்லியடித்தது.
60, உயர் நீதிமன்ற பாதுகாப்பு மத்திய படையிடம்.
61, ஹெலிகாப்டரை கும்பிட வைத்தது.
62 ,RK நகரில் இமாலய கள்ள ஓட்டு.
63, செம்பர பாக்கத்தம்மா என விருது வாங்கியது.
64, ஸ்டிக்கர் ஒட்டியது.
65, கோவனை கைது.
.
66, பேனர் கிழிப்பில் விஜயகாந்திடம் ஜகா வாங்கியது.
67, மிடாஸில் மிதக்கும் தமிழகம்.
68, ஈயம் பூசுபவர்களை முதலீட்டாளர் என்றது.
69, வெற்று வார்தைகளில் வர்ணஜாலம் காட்டியது.
70, விஷன் 2023 வெளியே வராமலே போனது …..
71, உபி சகோதரி உலகையே வாங்கி குவிப்பு .
இது வெறும் சேம்பிள் தான் ஆத்தா இதுக்கே 71 நாள் முழுசா போட்டா எத்தனை வருசம் ஆகும்
என்று அரசியல் உண்மைகள் எனும் முகனூல் குழுவின் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மேற்படி போன்ற பல்வேறான பதிவுகள் சமூக ஊடகங்களின் அதிகமாக வைரலாக பரவும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது .


