தினகரன் அலுவலகப் படுகொலை மறு விசாரணை வழக்கில் சிபிஐக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

Published:

 
கடந்த 2007-ம் ஆண்டு திமுகவின் அடுத்த கட்ட தலைவர்கள் குறித்த கருத்துக் கணிப்பை திமுக குடும்பப் பத்திரிகையான தினகரன் வெளியிட்டது.
 
இதில் ஆத்திரமடைந்த திமுகவின் அழகிரி கோஷ்டியினர் மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து பெட்ரோல் குண்டுகளை வீசி அப்பாவி ஊழியர்கள் மூன்று பேரைக் கொன்று வெறியாட்டம் ஆடினார்கள்.
 
”கொலைக்குக் காரணமான அழகிரி மற்றும் ரெளடிகளை சட்டத்தின் முன் நிறுத்து தண்டனை வாங்கித் தருவோம்” என்று தினகரன் பத்திரிகை உரிமையாளரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் பேரன் கலாநிதி மாறன் கூறியிருந்தார். ஆனால் பிறகு அதனைப் பற்றி அவர் வாயே திறக்கவில்லை.
 
அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேரின் மீது வழக்கு தொடரப்பட்டது. பிறகு அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று கூறி விடுதலை செய்யப்பட்டனர்.
 
அதனை எதிர்த்து தமிழக அரசும், கொல்லப்பட்டவர்களின் ஒருவரான வினோத் என்பவரின் தாயாரும் மறுவிசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
 
அந்த மனு தற்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, விசாரணைக்கு ஒத்துழைக்காத திமுக தரப்பு ரெளடிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img