அடுத்த ரவுண்ட் கொள்ளைக்காக ஆலாய்ப் பறக்கும் ஓட்டுப் பிச்சைக்காரர்கள்!

தமிழகத்தில் பெரும்பாலானோர் அரசியல் வாதிகள், அரசியல் கட்சியினர், , ஊடகங்கத்தினர், அரசாங்கம், போன்றவற்றின் செயல்பாடுகள் பிடிக்காமல் மிகுந்த வெறுப்பு அடைந்துள்ளனர்.
விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வெறுப்பு அடைந்துள்ளவர்கள் எவரையும் விட்டுவைக்காமல் அவர்களுக்கு எதிரான பல்வேறான பதிவுகளை சமூக ஊடகங்களின் அதிகமாக தற்போது பதிவிட தொடங்கி விட்டனர் என கூறினால் அது மிகையாகது.
இந்த நிலையில் புஷ்கின்-Pushkin எனும் முகனூல் குழுவின் பக்கத்தில் #‎அடுத்தரவுண்டு_கொள்ளைக்காக‬
‪#‎ஆலாய்பறக்கும்_ஓட்டுப்பொறுக்கிகள்‬ எனும் தலைப்பில் நேற்று( 29-01-2016 )பதிவிடப் பட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது :-
#‎அடுத்தரவுண்டு_கொள்ளைக்காக‬
‪#‎ஆலாய்பறக்கும்_ஓட்டுப்பொறுக்கிகள்‬
கடந்த 30,40ஆண்டுகளில் இல்லாத முறை,தேர்தலில் ஓராண்டுக்கு முன்பே “தேர்தல்பரபரப்பை” தொடங்கிவிட்டனர் ஊடகமும் அரசியல்வாதிகளும்.
கட்சிகளுக்கும் நடக்கும் அதிகார வெறி, பதவி அரிப்பு, பணவெறி போட்டி வெடித்துக் கிளம்புகிறது.
குதிரைப்பேரம், ஜாதி,கூட்டணிக் கணக்கு, கருப்புப்பணப் புழக்கம்
குழிபறிப்பால்தான் அந்த பரபரப்பு தெரிகிறது.
மக்களோ அன்றாடப் பொழப்புக்கு ஆளாகப் பறந்து கொண்டிருக்கிறார்கள்.அதுதான் இப்படி வெளிப்படுகிறது
பழ. கருப்பையா நீக்கம், நாஞ்சில் சம்பத் பீசைப் பிடுங்கியது,
தேமுதிகவிலிருந்து அதிமுக மாறிய 7பேர் புலம்புவது என வெடிக்கிறது.
சீட் கொடுக்க வேண்டியிருக்குமோ என பயந்து அதிமுகMLAவினர், தேமுதிக MLA7பேரிடம் 4மாதமாக யாரும் பேசவில்லை என புலம்புகிறார்கள்.
எல்லா ஜாதிகட்சிகளும் மாநாடு நடத்தி கட்சிகளை மிரட்டுகிறார்கள்.
ஆட்சியில் பங்கு வேண்டுமென்கிறார்கள்
பாமக ஒன்றரையாண்டுக்கு முன்பே முதல்வர் வேட்பாளராக தனது மகனை அறிவித்து தேர்தல் காமெடி ஷோவை தொடங்கினர்.
கூட்டணியில் பங்கு கேட்ட திருமா, EVKS கும்பல், இதெல்லாம் கதைக்காகாது என திருமா 3வது அணி கடையைத் திறந்துள்ளனர்.
காங்கிரசோ திமுக அழைப்புக்காக அறிவாலய படிகட்டில் படுத்துக் கிடக்கிறது
விலையைக் கூட்டுவதற்காக எல்லாருக்கும் கையைக் கொடுக்காமல், பல்லை மட்டும் இளித்தபடி பேரம் பேசும் விபச்சாரம் செய்கிறார் விஜயகாந்த்.
சரத்குமாரும், வேல்முருகன், தனியரசு, செ.கு தமிழரசு போன்ற அல்லக்கை அடிமைகள் நாங்கள் அதிமுகவோடுதான் இருக்கிறோம் என்று மாதம் ஒரு முறை தமிழக மக்களுக்கும் ஜெயாவுக்கும் நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
கதவு திறந்தே இருக்கிறது
மதவாத கட்சிகளைத் தவிர யார் வேண்டுமானாலும் கட்சிக்கு வரலாமென கூவிக்கூவி அழைத்த திமுக,
இப்போது ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள கட்சிகள் யாராக இருந்தாலும் வரலாமென பிஜேபி கட்சிக்கும் பொறி வைக்கிறார்.
தனியாக நிற்போம் என MPதேர்தலில் சவடால் அடித்த சாராய ராணி, இப்போது தேர்தல் நேரத்தில் தகுந்த முடிவெடுக்கப் படுமென வலை விரிக்கிறார்.
மதிமுகவிலிருந்து ஒவ்வொருவராக நழுவுகிறார்கள்,
தொண்டர்களோ கூட்டம்கூட்டமாக இடம் பெயர்கிறார்கள்.
சரத்குமார் கட்சியில் இருந்த 1MLAவும் ஓடிவிட்டார். கட்சியில் பலரை நீக்கியுள்ளார்.
நாங்கள் பிஜேபி கூட்டணியில் இல்லை ,3வது அணியும் ஜெயிக்கப் போவதில்லை அதிமுக,திமுக இரண்டில் ஏதாவதொன்றுதான் ஜெயிக்கும் என்று மறைமுகமாக தூதுவிடுகிறார் கொமஜக கட்சி ஈஸ்வரன்.
பச்சமுத்துவும்,வாசனும் அதிமுக பக்கம் போகவே ஆர்வம் காட்டுகிறார்கள்.
மீண்டும் கட்சியில் சேர அழகிரி முயற்சிக்கிறார்.
காங்கிரஸ் உடைந்து கொண்டே இருக்கிறது. இப்போது விஜயதரணி பிரச்சனை.
ஜவாகிருல்லா கட்சி உடைகிறது.
அவரும் ஜெயா பக்கம் போகத் துடிக்கிறது.
70முஸ்லீம் அமைப்புகள் அவர்களுக்குள் நடக்கும் நாய்சண்டை அது தனிக்கதை
7%அல்லது 10%இடஒதுக்கீடு தந்தால் பிஜேபியைக்கூட ஆதரிக்கத் தயார் என TNTJ கும்பல் அறிவிக்கிறது.
இன்னும் 2மாதத்தில் இன்னும் இதுபோல பல கூத்துகள் நடக்கவிருக்கிறது
பழைய MLA,MPகள், பதவியிலிருக்கும் MLA,MPகள் எப்படியாவது மீண்டும் சீட்டை வாங்கவேண்டும் எப்படியாவது ஜெயிக்க வேண்டும்.
இதில்லாமல் அவர்களது மனைவி,பிள்ளைகள்,பினாமிகளுக்கு சீட்டுக்காக நாயாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
மக்களுக்காக மக்களின் முன்னேற்றத்துக்காக நாட்டின் வளர்ச்சிக்காக பொதுச் சேவை செய்யவா இப்படி தேர்தலில் போட்டியிடத் துடிக்கிறார்கள்
கொஞ்சம்வாய் கொஞ்சம் பணம் போட்டு கோடிகோடியாக கொள்ளையடிக்கும் தொழிலாக அரசியல் ஆகிப்போனதன் அடையாளமே இந்த நிலை.
மக்கள் எல்லோர் மீதும் அவநம்பிக்கை, அதிருப்தியில் இருப்பதால் அது அரசியலில் தெரிகிறது.
எது ஜெயிக்கும் என்பதில் குழப்பமுள்ளதால்தான் மேற்கூறிய குழப்பங்களெல்லாம் எல்லாக் கட்சியிலும் நிகழ்கிறது.
இது முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் பிரதிபலிப்பே,அது அரசிலும் எதிரொலிக்கிறது.
இது முதலாளித்துவத்தை, ஏகாதிபத்தியத்தை,உலகமயத்தை காக்கும் இந்திய போலி ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட கடும் நெருக்கடிதான் இந்த நிலைக்கு காரணம்.
அரசு ஆளும்தகுதியை இழந்ததன் அறிகுறி.
நாட்டை உலகமயம் நேரடியாக ஆளத் தொடங்கியதால் தற்போதிருக்கும் அரசு நிர்வாகம் செயலிழந்து கொண்டிருக்கிறது.
பேச்சளவில்கூட கொள்கை கிடையாது கோட்பாடு கிடையாது,
ஜெயிப்பதற்காக ஜாதிபலம், மதவெறி,ரவுடிபலம்,
மாபியாக்கூட்டு
கருப்புப்பணம்,கேவமான சந்தர்ப்ப வாதம், பிழைப்புவாதம்
இதுதான் எல்லாக் கட்சிகளின் நிலைமையும் கூட. ஏறக்குறைய தொண்டர்களின் நிலவரம் இதுதான்.
கட்சியில் சேரு என்றால் என்னா கிடைக்கும்?
ஓட்டுப் போடு என்றால் எவ்வளவு கிடைக்கும் என்கிற அளவுக்கு மக்களையும் கெடுத்து விட்டனர்.
குறைந்த முதலீடு போட்டு கோடிகோடியாய் கொள்ளையடிக்கும் பிசினஸாக அரசியல், அதிகாரம்,பதவி மாறிப் போனதால் இது மக்களுக்கானதல்ல என்பதை மக்கள் உணர வேண்டும்.
MLAசீட்டின் தற்போதைய விலை 2கோடி 5கோடி.
அது போக 3மாத சரக்கு,பேனர்,கட்டவுட், பொதுக்கூட்டச் செலவு என 20கோடி வரை செலவாகும்.
அதாவது 50கோடி சொத்தும் அதில் 20கோடியாவது செலவு செய்யும் தகுதியுடையபணக்காரர்கள்,
பழைய ஜமீன், மன்னர்கள், முதலாளிகள், மாபியாக் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் தேர்தலில் நிற்க முடியும் வெற்றி பெற முடியும்.
ஆனால் சொல்லிக்கொள்வது இது ஜனநாயக நாடு.எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்.
யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் என்பது.
நடைமுறையோ பணக்காரன் மட்டும்தான் போட்டியிடக்கூடிய நிலை.
தினம் 30ரூபாய் வருமானம் இல்லாத வறுமைக்கோட்டுக்கு கீழே மக்கள் வாழும் நாட்டில் 30கோடி செலவு செய்யும் தகுதியுள்ளவர்கள் மட்டுமே போட்டியிடும் நாட்டில்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்
இது ஜனநாயக நாடு, வாக்களிப்பது ஜனநாயகக் கடமை
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதெல்லாம் மக்களை ஏய்க்கும் ஜால வார்த்தைகள்தான். என்று புஷ்கின்-Pushkin எனும் முகனூல் குழுவின் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளது.
தற்போது ந்த பதிவு சமூக ஊடகங்களின் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories