முதலமைச்சர் ஜெயலலிதா பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வார் ? : அற்புதம்மாள்

 
முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் அரசியல் சாசன சட்டப்பிரிவு 161-ஐ பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வார் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறிள்ளார்
 
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது :-
 
கடந்த 25 ஆண்டுகளாக செய்யாத குற்றத்துக்காக என் மகன் பேரறிவாளன் சிறையில் உள்ளார். பேரறிவாளனிடம் வாக்கு மூலம் வாங்கிய அதிகாரி, தண்டனையளித்த நீதிபதி, சிறை யில் கண்காணித்த கண்காணிப் பாளர் என அனைவரும் இந்த சிறை தண்டனைக்கு பேரறிவாளன் உரித்தானவர் அல்ல; அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என அறிக்கை கொடுக்கின்றனர்.
 
கடந்த ஒன்றரை ஆண்டு களுக்கு முன்னர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அன்றைய காங்கிரஸ் அரசு இவர்களின் விடுதலையை எதிர்த்ததால் அது நின்றுபோனது. அதன்பின்னர் அமைந்த மோடி அரசும் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இன்றுவரை அவர்களை எப்படி வெளியில் கொண்டு வருவது என்று தெரியாமல் தவிக்கிறோம்; சட்டப் படியாக போராடுகிறோம்.
 
எனவே, அனைத்து ஆயுள் சிறைவாசிகளுக்காகவும், இவர் களது விடுதலையை முன் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. பிணையில் வர என் மகனுக்கு விருப்பமில்லை. நிரபராதி என தெரிந்தபின்னர் முழு விடுதலை பெற்று வெளியில் வரவே அவர் விரும்புகிறார். தமிழ் திரைப்பட இயக்குநர்களும் முதலமைச்சரை சந்திக்க தேதி கேட்டு காத்திருக் கிறார்கள். தமிழக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் அரசியல் சாசன சட்டப்பிரிவு 161-ஐ பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்வார். மேலும் அவ்வாறு விடுதலை செய்தால் இதில் மத்திய அரசு தலையிட முடியாது என்பதையும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது என்று அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

Topics

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Entertainment News

Popular Categories