சென்னை மாகாணத்தின் முதல், முதல்-அமைச்சர் ஓ.பி.ராமசாமி ரெட்டியாரின் 121-வது பிறந்த நாள் விழாவில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தெரிவித்ததாவது:
ஓ.பி.ராமசாமி ரெட்டியாரின் கடுமையான உழைப்பு, நேர்மை, சாதி மத, பேதமின்மை காரணமாகத்தான் அவரால் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர முடிந்தது. ஓ.பி.ராமசாமி ரெட்டியாரின் முயற்சியால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் சென்றுவர ஆலய நுழைவு சட்டம் நிறைவேற்றப்பட்டது. பூரண மதுவிலக்கை கொண்டு வந்தார்.
பாராளுமன்றத்தில் ஓ.பி.ராமசாமி ரெட்டியாரின் உருவ படத்தை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதற்கான குழுவுக்கு அனுப்பி வைத்து பரிந்துரை செய்வேன்” என்றார்


