அ.தி.மு.க.வில் விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை(புதன்கிழமை) மாலை 5.30 மணியுடன் முடிவடைய உள்ளது. தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் இருந்து கடந்த 20-ந்தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வந்தது. இது நாளையுடன் முடிகிறது.

