March 25, 2025, 5:09 AM
27.3 C
Chennai

சிதம்பரம் கோயிலில் அதிர்ச்சி: பக்தையைத் தாக்கிய தீட்சிதர்! வழக்கு பதிந்த போலீஸார்!

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தனது மகன் பெயருக்கு அர்ச்சனை செய்ய வந்த நர்ஸ் ஒருவரை, வாக்குவாதம் முற்றி கன்னத்தில் அடித்ததாக சிதம்பரம் தீட்சிதர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிதம்பரம் வ.வு.சி., தெருவை சேர்ந்த செல்வகணபதி மனைவி லதா. ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நர்சாக பணியாற்றி வருகிறார்.

இவர் நடராஜர் கோயில் வளாகத்திலுள்ள முக்குருணி விநாயகர் சந்நிதிக்குச் சென்றுள்ளார். அப்போது, தனது மகன் பிறந்த நாள் என்பதால், மகன் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கூறி, அர்ச்சனைத் தட்டைக் கொடுத்தாராம்.

ஆனால் அங்கே சந்நிதியில் இருந்த தீட்சிதர் தர்ஷன், சந்நிதியின் வாசற் படியில் அமர்ந்து கொண்டு, அலட்சியமாக அங்கிருந்த படியே அர்ச்சனை செய்து, தீபாராதனை காட்டியுள்ளார். இதனால் மன வருத்தம் அடைந்த நர்ஸ் லதா, தீட்சிதர் தர்ஷனிடம் இவ்வாறு ஆண்டவன் சந்நிதியில் அலட்சியமாக நடந்து கொள்ளலாமா? எழுந்து சென்று சந்நிதிக்கு உள்ளே சென்று தீபாராதனை காட்டி அர்ச்சனை செய்தால் என்ன என்று கேட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தீட்சிதர் தர்ஷன், நர்ஸ் லதாவின் கன்னத்தில் அடித்ததாகக் கூறப் படுகிறது. இதனால் நிலை தடுமாறி தான் விழுந்ததாகவும் கூறி, லதா சிதம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, தீட்சிதர் மீது பொது இடத்தில் ஆபாசமாக பேசியது, மிரட்டல் விடுத்தது, பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசார் வழக்கு பதிவு செய்ததை அறிந்த தீட்சிதர் தர்ஷன், தலைமறைவாகிவிட்டாராம். இதை அடுத்து போலீஸார் தீட்சிதரை தேடி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், சந்நிதியில் பூஜை செய்யும் தீட்சிதர்கள், அர்ச்சகர்கள், பயபக்தியுடன் சுவாமி கும்பிட வரும் பக்தர்களைப் போல், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆலயத்தில் செயல்படவேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

பாகிஸ்தானுடன் முதலில் அமைதிக்காகவே கை கொடுத்தேன்: பிரதமர் மோடி!

நல்ல தொடக்கம் ஆகட்டும் என்று விரும்பினேன்.  ஆனால்… ஒவ்வொரு முறையும் நல்ல முயற்சியின் விளைவுகள், எதிர்மறையாகவே இருந்த்து.  அவர்களுக்கு நல்லபுத்தி ஏற்பட வேண்டும்,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

பாகிஸ்தானுடன் முதலில் அமைதிக்காகவே கை கொடுத்தேன்: பிரதமர் மோடி!

நல்ல தொடக்கம் ஆகட்டும் என்று விரும்பினேன்.  ஆனால்… ஒவ்வொரு முறையும் நல்ல முயற்சியின் விளைவுகள், எதிர்மறையாகவே இருந்த்து.  அவர்களுக்கு நல்லபுத்தி ஏற்பட வேண்டும்,

பாரதத்தை இணைக்கும் ஒரே கலாசார இழை! : பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

காந்தியடிகளின் செயல்பாடுகளின் தாக்கத்தை, இன்றும் கூட பாரத நாட்டின் மீது, ஏதோ ஒரு வகையிலே… புலப்படுகிறது.  மேலும் காந்தியடிகள், எதை உபதேசித்தாரோ அதை வாழ முயற்சி செய்தார். 

தேசப் பணியில் ஈடுபட போடப்பட்ட வித்து: பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

பொறுப்புகள் காரணமாக அவரால் வர முடியவில்லை என்றாலும் நான் முதல்வராக இருந்த போது வந்திருக்கிறார்.  அவருடைய ஆசிகள் எனக்கு நிரம்பக் கிடைத்திருக்கிறது.  அவர் தான் எனக்கு வழிகாட்டினார்,

வங்கதேச ஹிந்துக்கள் பாதுகாப்பு பற்றி ஆர்.எஸ்.எஸ் தீர்மானம்!

பெங்களூருவில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய பிரதிநிதி சபா நிறைவேற்றிய தீர்மானம் – 1

Entertainment News

Popular Categories