சிதம்பரம் கோயிலில் அதிர்ச்சி: பக்தையைத் தாக்கிய தீட்சிதர்! வழக்கு பதிந்த போலீஸார்!

chidambaram bakthai - 2026

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தனது மகன் பெயருக்கு அர்ச்சனை செய்ய வந்த நர்ஸ் ஒருவரை, வாக்குவாதம் முற்றி கன்னத்தில் அடித்ததாக சிதம்பரம் தீட்சிதர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிதம்பரம் வ.வு.சி., தெருவை சேர்ந்த செல்வகணபதி மனைவி லதா. ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நர்சாக பணியாற்றி வருகிறார்.

இவர் நடராஜர் கோயில் வளாகத்திலுள்ள முக்குருணி விநாயகர் சந்நிதிக்குச் சென்றுள்ளார். அப்போது, தனது மகன் பிறந்த நாள் என்பதால், மகன் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கூறி, அர்ச்சனைத் தட்டைக் கொடுத்தாராம்.

ஆனால் அங்கே சந்நிதியில் இருந்த தீட்சிதர் தர்ஷன், சந்நிதியின் வாசற் படியில் அமர்ந்து கொண்டு, அலட்சியமாக அங்கிருந்த படியே அர்ச்சனை செய்து, தீபாராதனை காட்டியுள்ளார். இதனால் மன வருத்தம் அடைந்த நர்ஸ் லதா, தீட்சிதர் தர்ஷனிடம் இவ்வாறு ஆண்டவன் சந்நிதியில் அலட்சியமாக நடந்து கொள்ளலாமா? எழுந்து சென்று சந்நிதிக்கு உள்ளே சென்று தீபாராதனை காட்டி அர்ச்சனை செய்தால் என்ன என்று கேட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தீட்சிதர் தர்ஷன், நர்ஸ் லதாவின் கன்னத்தில் அடித்ததாகக் கூறப் படுகிறது. இதனால் நிலை தடுமாறி தான் விழுந்ததாகவும் கூறி, லதா சிதம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, தீட்சிதர் மீது பொது இடத்தில் ஆபாசமாக பேசியது, மிரட்டல் விடுத்தது, பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

போலீசார் வழக்கு பதிவு செய்ததை அறிந்த தீட்சிதர் தர்ஷன், தலைமறைவாகிவிட்டாராம். இதை அடுத்து போலீஸார் தீட்சிதரை தேடி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், சந்நிதியில் பூஜை செய்யும் தீட்சிதர்கள், அர்ச்சகர்கள், பயபக்தியுடன் சுவாமி கும்பிட வரும் பக்தர்களைப் போல், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆலயத்தில் செயல்படவேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories