சிதம்பரம் கோயிலில் அதிர்ச்சி: பக்தையைத் தாக்கிய தீட்சிதர்! வழக்கு பதிந்த போலீஸார்!

chidambaram bakthai - 2026

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தனது மகன் பெயருக்கு அர்ச்சனை செய்ய வந்த நர்ஸ் ஒருவரை, வாக்குவாதம் முற்றி கன்னத்தில் அடித்ததாக சிதம்பரம் தீட்சிதர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிதம்பரம் வ.வு.சி., தெருவை சேர்ந்த செல்வகணபதி மனைவி லதா. ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நர்சாக பணியாற்றி வருகிறார்.

இவர் நடராஜர் கோயில் வளாகத்திலுள்ள முக்குருணி விநாயகர் சந்நிதிக்குச் சென்றுள்ளார். அப்போது, தனது மகன் பிறந்த நாள் என்பதால், மகன் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கூறி, அர்ச்சனைத் தட்டைக் கொடுத்தாராம்.

ஆனால் அங்கே சந்நிதியில் இருந்த தீட்சிதர் தர்ஷன், சந்நிதியின் வாசற் படியில் அமர்ந்து கொண்டு, அலட்சியமாக அங்கிருந்த படியே அர்ச்சனை செய்து, தீபாராதனை காட்டியுள்ளார். இதனால் மன வருத்தம் அடைந்த நர்ஸ் லதா, தீட்சிதர் தர்ஷனிடம் இவ்வாறு ஆண்டவன் சந்நிதியில் அலட்சியமாக நடந்து கொள்ளலாமா? எழுந்து சென்று சந்நிதிக்கு உள்ளே சென்று தீபாராதனை காட்டி அர்ச்சனை செய்தால் என்ன என்று கேட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தீட்சிதர் தர்ஷன், நர்ஸ் லதாவின் கன்னத்தில் அடித்ததாகக் கூறப் படுகிறது. இதனால் நிலை தடுமாறி தான் விழுந்ததாகவும் கூறி, லதா சிதம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, தீட்சிதர் மீது பொது இடத்தில் ஆபாசமாக பேசியது, மிரட்டல் விடுத்தது, பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசார் வழக்கு பதிவு செய்ததை அறிந்த தீட்சிதர் தர்ஷன், தலைமறைவாகிவிட்டாராம். இதை அடுத்து போலீஸார் தீட்சிதரை தேடி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், சந்நிதியில் பூஜை செய்யும் தீட்சிதர்கள், அர்ச்சகர்கள், பயபக்தியுடன் சுவாமி கும்பிட வரும் பக்தர்களைப் போல், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆலயத்தில் செயல்படவேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories