தமிழக காவல் துறையில் பணியாற்றும் பெரும்பாலோனர் காவலர்கள் காவலர்களாகிய எங்கள் குமுறலையும் முதலமைச்சர் அம்மா கண்டுகொள்ளவதே கிடையாது என எவரை பார்த்தாலும் சொல்லி செய்வது அறியாது வெகு வருடங்களாக புலம்பி கொண்டேதான் உள்ளனர்.
காவல் துறையில் பணியாற்றுபவர்கள் பணி தான் மிகவும் கடினமானது என்றாலும் அது மிகையாகாது. அந்த துறையில் பணியாற்றுபவர்களுக்கும் பல சொல்ல முடியாத பல துயரங்கள் இருந்து கொண்டு தான் உள்ளது.
இந்த நிலையில் தமிழக காவல் துறையை முழு கட்டுபாட்டில் வைத்து இருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பல வருடங்களாக அவர்களது பிரச்னைகளை தீர்த்து வைக்க தொடர்ந்து பலமுறை கோரிக்கை விடுத்து கொண்டே தான் உள்ளனர். கோரிக்கை விடுத்தும் எவ்விதமான பலனும் கிடைக்காததால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மீது வெறுப்பு அடைந்து சமூக ஊடகங்களை பயன் படுத்தி அவர்களது கோரிக்களை பொது மக்களுக்கு சுட்டி காட்டி தெரிவிக்கும் நோக்கில் வெளியிட ஆரம்பித்து விட்டனர்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு காவலர்களின் பணிவான வேண்டுகோள்! எனும் தலைப்பில் கடந்த சில வாரங்களாக வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவி வரும் தகவலில் கூறியுள்ளதாவது :-
‘‘10-ம் வகுப்பு தகுதி அடிப்படையில் வேலைக்குச் செல்லும் அரசு ஊழியர்களுக்கு தர ஊதியம் 2,400 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால், அதே தகுதியில் காவலர் பணியில் சேருபவர்களுக்கு 1,900 ரூபாய் மட்டுமே
வழங்கப்படுகிறது. இந்த ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்.
காவலர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்கப்படுவதை 7 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும். பயணப்படி 10 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்த்த வேண்டும். உணவுப்படியை 200 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர்த்த வேண்டும். 8 மணி நேர வேலை, அனைத்து மாவட்டங்களிலும் காவலர் நல அமைப்பு ஏற்படுத்த வேண்டும். ஒரு காவலருக்கு ஒரு வேலை’’ என தமிழக காவல் துறையினரின் 9 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
அதோடு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக டி.கே. ராஜேந்திரன் கடந்த அக்டோபர் 13-ம் தேதி பொறுப்பேற்றபோது, ‘காவலர்களின் குறைகள் கனிவோடு பரிசீலிக்கப்படும்’ என்று கூறினார். அந்த வாக்குறுதி என்னவாயிற்று’’ என்று வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும்’ காவல் துறையினரின் குமுறல் பதிவில் கூறப்பட்டுள்ளது.
மேற்படியான பிரச்னைகள் தமிழகக் காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு இருப்பது உண்மைதான் என காவல் துறை உயர் அதிகாரிகள் பலர் கூறுகின்றனர்
.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக காவல் துறையில் பணியாற்றுவோரின் கோரிக்களையும் நிறைவேற்ற வேண்டிய காட்டாயம் அதிமுக அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது..
அதிமுக அரசாங்கம் காவல் துறையினரின் கோரிக்களை நிறைவேற்றாவிட்டால் காவலர் மற்றும் அவரது குடும்ப அங்கத்தினர்களின் வாக்குகளை அதிமுக இழக்கும் என்றே கருதலாம்.


