வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியாம் !

Published:

 
உலக அளவில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியை எட்டிவிட்டதாக அந்த சேவையை வழங்கிவரும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து “வாட்ஸ் ஆப் இணைய தள செய்தி பதிவில் தெரிவித்துள்ளதாவது :-
வாட்ஸ் ஆப்பை உலகில் 100 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 5 மாதங்களில் மட்டும் 10 கோடி பேர் இச்செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி உள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் 7 பேரில் ஒருவர் தங்களது கைப்பேசி அல்லது கணினி மூலம் கட்செவி அஞ்சலை பயன்படுத்தி வருகின்றனர்.
மற்ற நாடுகளை விட இந்தியாவில் கட்செவி அஞ்சலை பயன்படுத்தி புகைப்படங்கள் அதிக அளவில் அனுப்பப்படுகின்றன என்று அந்த நிறுவன இணைய தள செய்தி பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img