சமபந்தி விருந்தில் கிராம மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட ராகுல் காந்தி !

Published:

 
ஆந்திரபிரதேச மாநிலம்ஆனந்தப்பூர் மாவட்டத்தில் பண்ட்லா பள்ளி கிராமத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கிராம மக்களிடம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தினை குறித்து கேட்டறிந்தார்.
தேசிய ஊரக வேலை திட்டத்தை காங்கிரஸ் அரசு கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் முதல் முறையாக இந்த திட்டத்தை இங்கு தான் தொடங்கி வைத்தனர் என நினைவு கூறி நாட்டில் வறுமையை அகற்ற இந்த திட்டம் ஒரு மைல்கல்லாக அமைந்தது என கூறினார்.
மேலும் கிராம மக்களுடன் சமபந்தி விருந்தில் கலந்து கொண்டு அப்பகுதி மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டார்.

Related articles

Recent articles

spot_img