தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 47வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி சென்னையில் நடைபெற்ற அமைதி பேரணியை திமுக தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார்
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை செல்லும் இந்த அமைதிப் பேரணியில் மு.க.ஸ்டாலின், துரை முருகன், கனிமொழி உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட பலர் மெரினா கடற்கரையில் உள்ள அண்னா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்


