மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா வின் 47-வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கம் வரை அமைதிப் பேரணி நடத்தப்பட்டது.
பின்னர் அண்ணா நினைவிடத்தில் கருணாநிதி, பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். திமுக தலைமை, மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள், முன்னாள் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட துணை அமைப்புகளின் நிர்வாகிகள் அமைதிப் பேரணியிலும், அஞ்சலி செலுத்தும் நிகழ்விலும் பங்கேற்றனர்.


