காமெடிப் பேச்சாளரும் தொலைக்காட்சி நடிகருமான மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் இன்று கார் விபத்தில் பலியானார்.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கோவிலுக்கு இன்று காலை வீட்டிலிருந்து காரில் வையம்மாள் புறப்பட்டார் காலை 7 மணியளவில் திருப்பத்தூர் கோட்டையிருள் பகுதியில் கார் சென்றபோது எதிர் பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சென்று மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். ஆனால் காரில் இருந்த வையம்மாள் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார்.


