முதலமைச்சர் மகள் மீது நில மோசடி புகார் !

Published:

 
குஜராத் முதலமைச்சர் மகள் மீது நில மோசடி புகார் கூறப்பட்டுள்ளதால் ஆனந்திபென் பட்டேல் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
ஆனந்திபென் பட்டேல் குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவரது மகள் அனார்ஜெஷ் பட்டேல், இவர் வெய்ல்டு உட்ஸ் ரிசார்ட்ஸ் மற்றும் ரியாலிட்டிஸ் என்ற நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார்.
இந்த நிறுவனத்திற்காக குஜராத் அரசு கிர்காடு பகுதியில் 250 ஏக்கர் நிலம் குறைந்த விலைக்கு அரசு ஒதுக்கியதாகவும், மேலும் அரசிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஆனந்தி பென்பட்டேல் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

Related articles

Recent articles

spot_img