காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விக்காக ஒரு குடும்பம் நாடாளுமன்றம் நடைபெறுவதை தடுக்கிறது என தலைவர் சோனியா காந்தியை விமர்ச(சி)னம் செய்துள்ளார் பிரதமர் மோடி.
பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பேரணிக் கூட்டம்அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகார்க் மாவட்டத்தின் மோரான் நகரில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு மோடிகூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விக்காக ஒரே ஒரு குடும்பம் பாராளுமன்றம் நடைபெறுவது தடுக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்காக அவர்கள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகளில் உள்ள சில தலைவர்கள் பாராளுமன்றத்தை நடத்துவதற்கு தயாராக இருக்கும் நிலையில், ஒரே ஒரு குடும்பம் மட்டும் மாநிலங்களவையை நடத்துவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தை 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் தரூண் கோகோய் தலைமையிலான அரசு எவ்வித வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றவில்லை.
வரவிருக்கும் தேர்தலில் அஸ்ஸாம் மக்கள் பாரதீய ஜனதா கட்சிக்கு வாய்ப்பளித்து அஸ்ஸாம் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று மோடி கூறினார்.


