December 6, 2025, 12:41 PM
29 C
Chennai

35 ரன் வித்தியாசத்தில் கடைசிப் போட்டியை கைப்பற்றிய இந்தியா! தொடரை 4-1 என வென்றது!

indian cricket - 2025

இந்திய நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரின் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது, இதில், இந்திய அணி 35 ரன் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்று முதலில் விளையாடத் தொடங்கிய இந்திய அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது, துவக்க வீரராகக் களமிறங்கிய ரோஹித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழக்க தொடர்ந்து ஷிகர் தவான் 6 ரனும் சுப்மான் கில் 7 ரன்னும், தோனி ஒரு ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பரபரப்பு தொற்றிக்கொண்டது

இந்நிலையில் அம்பத்தி ராயுடுவுடன் விஜய் சங்கர் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியின் ரன்னை உயர்த்தினர். அம்பத்தி ராயுடு 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் இதில் 4 சிக்சர்கள் 8 பவுண்டரிகள் அடங்கும் விஜய்சங்கர் 45 ரன் எடுத்தார் தொடர்ந்து கேதர் ஜாதவ் 34ம் கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்டியா கலக்கலாக விளையாடி 22 பந்துகளில் 5 சிக்சர் இரண்டு பவுண்டரி உள்பட 45 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்

இறுதிக்கட்டத்தில் புவனேஸ்வர் குமார் 6 ரன்கள் எடுக்க இந்திய அணி 45.1 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது

இதையடுத்து 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்துயின் அணி துவக்க வீரரான நிகோலஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இன்னொரு வீரர் முன்றே 24 ரன்னும் வில்லியம்சன் 39 ரன்னும் எடுத்தனர்

ஆனால் ரோஸ் டெய்லர் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தார் பின்னர் டோம் லாதம் 37ரன்னும் ஜிம்மி நீசம் 44 ரன்னும் எடுத்தனர் கோலின் டே கிராண்ட்டொம் 11, சாண்ட்னெர் 22 ரன் எடுத்தனர் அஸ்ட்லெ 10ம் மாட் ஹென்றி 17 ரன்னும் எடுத்தனர். இருப்பினும் அந்த அணி 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்களே எடுக்க முடிந்தது! இதையடுத்து அந்த அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது

இந்திய அணி தரப்பில் முகமது ஷமி ஹர்திக் பாண்டியா இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சாஹல் 3 விக்கெட் எடுத்தார்! கேதர் ஜாதவ் புவனேஸ்வர் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்

ஏற்கெனவே மூன்று போட்டிகளில் வென்று இருந்த இந்திய அணி இந்த போட்டியின் வெற்றியையும் சேர்த்து நான்கு வெற்றியை பதிவு செய்தது முகமது சமி தொடர்நாயகன் விருதைப் பெற்றார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories