சபரி மலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கோரி மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், 1,500 ஆண்டுக்கு முன்பாக சபரிமலை கருவறையில் பெண்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்?, “மத அடிப்படையில் மட்டுமே பெண்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்க முடியும். மற்றபடி அனைவரும் கோயிலுக்கு செல்வதற்கு அரசமைப்பு சட்டம் வழி வகுத்துள்ளது. எனினும், பெண்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்பதை அரசு விளக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
ஒரு வாரத்துக்குள் இதுதொடர்பாக கேரள அரசு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அத்துடன் இவ்வழக்கின் அடுத்த விசாரணையை வரும் பிப்ரவரி 8ம்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


