பீகார் மாநிலம் காகரியா பகுதியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளியின் மகன் வத்சல்யா சிங் சவுகானிற்கு, மைக்ரோசாப்ட் நிறுவனம், ஆண்டிற்கு 1.02 கோடி ரூபாய் சம்பளமாக தர முன்வந்துள்ளது. வத்சல்யா சிங் சவுகான், தற்போது காரக்பூர் ஐ.ஐ.டி.யில் இறுதியாண்டு படித்து வருகிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில், வரும் அக்டோபர் மாதம், அவர் பணியில் சேர உள்ளார்.

