நாட்டறம்பள்ளி கல்லூரியில் மர்மப் பொருள் வெடித்த விபத்தில் ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்

திருப்பத்தூர் அருகே, நாட்டறம்பள்ளியில் வானத்திலிருந்து பறந்து வந்து விழுந்த மர்ம பொருள் பொறியியல் கல்லூரி வளாகத்துக்குள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் கல்லூரி பஸ்சின் டிரைவர் உடல் கருகி பலியானார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். மர்மப் பொருள் விழுந்த இடத்தில் 5 அடி ஆழத்துக்கு பெரிய பள்ளம் ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த நாட்டறம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் ‘டோல்கேட்’ பகுதியில் பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில் நேற்று காலை 11 மணியளவில் வானத்திலிருந்து பறந்து வந்த ஒரு மர்மப் பொருள் பிரதான கட்டடத்துக்கு எதிரே உள்ள தோட்டப் பகுதியில் விழுந்து, பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் பெரும் புகை மண்டலம் ஏற்பட்டது. இந்த வெடிச்சத்தம் அந்தப் பகுதியையே அதிர வைத்தது. மாணவ, மாணவிகள் அலறி அடித்து வெளியே ஓடிவந்தனர்.

வெடிபொருள் வெடித்துச் சிதறியபோது அருகே நின்றிருந்த கல்லூரி பஸ்சின் டிரைவர் கே.பந்தாரப்பள்ளியை சேர்ந்த காமராஜ் (வயது 40) என்பவர் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடினார். தோட்டத்தில் வேலைசெய்து கொண்டிருந்த பணியாளர்கள் முரளி (30), சந்தோஷ் (40), சசிகுமார் (45) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.

படுகாயமடைந்தவர்களை நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே காமராஜ் இறந்து விட்டார். மற்ற 3 பேரும் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

வெடிபொருள் வெடித்துச் சிதறியதில் கல்லூரியில் சில அறைகளின் கண்ணாடிகள் நொறுங்கின. வளாகத்துக்குள் நிறுத்தப்பட்டிருந்த 5 பஸ்களின் கண்ணாடிகளும் நொறுங்கின.

வெடிபொருள் விழுந்த இடத்தை நாட்டறம்பள்ளி தாசில்தார் செல்வராஜ் பார்வையிட்டபோது பெரிய பள்ளம் ஏற்பட்டிருந்தது. அதில் இருந்து புகையும் வெளிவந்து கொண்டிருந்தது. போலீசார் அந்த இடத்தை பார்வையிட்டு மர்மப் பொருளைச் சுற்றி வேலியிட்டு யாரும் நெருங்கிவிடாமல் தடுப்புகளை ஏற்படுத்தினர்.

மர்மப் பொருள் குறித்து வானியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளுக்கும், வெடிபொருள் நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே சம்பவம் நடந்த இடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரி ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். கல்லூரி தலைவர் செல்வமும் அந்த இடத்தை அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Topics

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories