2 மணி நேரம் 40 நிமிடங்கள்… ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரை!

pannerselvam budget - 2026

இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது! 2019 – 20 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று காலை 10 மணி அளவில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான – ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

தமிழக சட்டப்பேரவையில் 2019-2020ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்…

பெண் குழந்தைக் கல்வி :

பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், 3ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான பெண் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு ரூ.48.70 கோடி ஒதுக்கீடு!

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்காக ரூ.476.26 கோடி நிதி ஒதுக்கீடு

விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தில் இதுவரை, 8.72 லட்சம் ஏழைப் பெண்கள் பயனடைந்துள்ளனர். 2019-2020 ஆம் ஆண்டிலும் இத்திட்டம் தொடர ரூ.198.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரியல்லாத வருவாய் 13 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது

2019-20ல் மாநில மொத்த வருவாய் வரவுகள் 1 லட்சத்து 97 ஆயிரம் கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது

ஊதிய உயர்வினால் ஏற்படும் நிதிச்சுமை, உதய் திட்டத்தால் ஏற்படும் கூடுதல் பொறுப்பு போன்றவை தொடரும்

மின் மாநிலம், உணவு மானியம், சமூக நலத்திட்டங்களின் கீழ் வரும் ஓய்வூதியங்கள் போன்ற திட்டங்கள் தொடரும்

மொத்த வருவாய் செலவீனங்கள் 2 லட்சத்து 12 ஆயிரத்து 35.93 கோடி ரூபாயாக இருக்கும்

இதனால் வருவாய் பற்றாக்குறை 14314.76 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது

மூலதன செலவுகளுக்கு அரசு எப்போதும் தனிக் கவனம் செலுத்தி வந்துள்ளது

டாஸ்மாக் மதுபான கடைகள் குறைப்பு!

டாஸ்மாக் மூலம் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் மதுபான கடைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது

மாநில ஆயத்தீர்வை போக்கினை கருத்தில் கொண்டு 7262.33 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்

முத்திரைத்தாள் கட்டண வருவாயில் நல்ல வளர்ச்சி காணப்படுகிறது

முத்திரைத்தாள் தீர்வையாக, வரும் நிதியாண்டில், 11512.10 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்

கடந்த நிதியாண்டை விட 2000 கோடி வருவாய் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்

வாகனங்கள் மீதான வரி வருவாய், 6510.70 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்

மாநில சொந்த வரி வருவாய் ரூ.1.26 லட்சம் கோடியாக கணிக்கப்பட்டுள்ளது

நிதி ஆதாரங்களை பெருக்க திறன்மிக்க வரி மேலாண்மை அவசியம்- ஓபிஎஸ்

மின் ஆளுமை திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்

பதிவுத்துறையில் இணையவழி பயன்பாடுக்காக நவீன மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது

மாநில சொந்த வரி வருவாயில் வணிக வரி முக்கியத்துவமானதாகும்

வணிக வருவாய் 2019-20ல் 96177.14 கோடியாக இருக்கும் என கணிக்கிறோம்.. என்று கூறினார் ஓபிஎஸ்.

2 மணி நேரம் 40 நிமிடங்கள் பட்ஜெட் உரையாற்றிய பன்னீர் செல்வம் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories