காங்கிரஸில் போட்டியிட 10-ம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்: தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு

Published:

‘தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வேட்பாளராக போட்டியிட விரும்புகிறவர்கள் தங்களது விருப்ப மனுவை வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

வேட்பாளர் விண்ணப்பப் படிவத்தை பெற ரூ.100 செலுத்த வேண்டும். சட்டமன்ற பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் வேட்பாளர் விண்ணப்ப கட்டணமாக ரூ.5000, பெண்கள் மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.2500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img