பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை காண, பிரதமர் மோடி லாகூருக்கு சென்ற போது நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம்மை சந்தித்துள்ளார் என்று தனது எருமை மாட்டை கண்டுபிடித்து தர உ.பி., போலீசுக்கு உத்தரவிட்டு சர்ச்சைகுள்ளான உத்திர பிரதேச அமைச்சர் ஆசாம் கான் கூறி உள்ளார்.
இந்நிலையில் இது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டு என மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஆசாம் கானின் இந்த கருத்திற்கு பா.ஜ., மட்டுமின்றி காங்கிரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆசாம் கான் நீண்ட காலமாக பொது வாழ்க்கையில் இருப்பவர். அவர் இத்தகைய ஆதாரமற்ற கருத்துக்களை கூற கூடாது. யார் என்ன கூறினாலும் அதை தங்களால் நம்பி விட முடியாது. தனது எருமை மாட்டை கண்டுபிடித்து தர உ.பி., போலீசுக்கு உத்தரவிட்டவர் தானே இந்த ஆசாம் கான் என்று இதுகுறித்து பேசிய கான்கிரஸ் செய்திதொடர்பாளர் தாம் வடக்கன் தெரிவித்தார்.


