அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டி, மேகாலயாவின் ஷில்லாங் நகரங்களில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இந்திய அணி 14 தங்கம், 5 வெள்ளி என மொத்தம் 19 பதக்கங்களை குவித்தது.
இன்று நடைபெற்ற மகளிர் 58 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் சரஸ்வதி ராவுத் தங்கம் வென்றார்.
பிறகு நடைபெற்ற ஆடவர் 69 கிலோ பளு தூக்குதல் போட்டியிலும் இந்தியாவைச் சேர்ந்த சம்போ லபுங் தங்கம் வென்றார்.
தெற்காசிய போட்டியில் முதல்முறையாக மகளிர் பளுதூக்குதல் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் சானுவின் 169 கிலோ சாதனையாக அமைந்தது.


