மதுரை அருகே நடந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் உடல்கள், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
மதுரை அருகே டி.கல்லுப்பட்டியில் அரசுப்பேருந்தும், சிமெண்ட் லாரியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 16 பேர் பலியாகினர். இவர்களது உடல் திருமங்கலம் அரசு மருத்துவமனை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டிருந்தன.
திருமங்கலத்தில் வைக்கப்பட்டிருந்த 10 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. இதில் ராணுவ வீரர் குடும்பத்தைச் சேர்ந்த நல்லகுருவம்மாள், ஜெயசந்தோஷ் ஆகியோரின் உடல்கள் மட்டும் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மேலும் 4 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.


