தேர்தல் புகார்களுக்கு புதிய சாப்ட்வேர் அறிமுகம்: ராஜேஷ் லக்கானி அறிவிப்பு

Published:

 

திருச்சியில் நடைபெற்ற தேர்தல் குறித்த ஒருநாள் பயிற்சி முகாமில் ஒன்பது மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் பங்கேற்றனர்.

 

அந்த முகாமில் தேர்தல் நடத்துவது தொடர்பாக  தலைமை தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானி, செய்தியாளர்களிடம் பேசினார். அதில், போலி வாக்காளர்கள் குறித்த புகாரின் பேரில், அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். 

 

அதேபோல் இறந்தவர்களின் பெயர்களையும், இரண்டு முறை இடம் பெற்றுள்ள வர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

தேர்தல் தொடர்பான புகார்களை அதற்குரிய சாப்ட்வேரில் பதிவு செய்து விட்டால், புகார் 5 நிமிடத்தில் தொடர்புடைய அதிகாரிக்கு சென்று விடும் எனவும், தமிழகத்தில் வரும் தேர்தலில், 65 ஆயிரத்து, 616 மையங்களில் ஓட்டுப்பதிவு நடைபெறும் என்றும் குறிப்பிட்டார். 

Related articles

Recent articles

spot_img