பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த நவம்பரில் நடந்த ஒருநாள் தொடரின் போது, யாசீர் ஷாவிடம் சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஐ.சி.சி.யின் ஊக்கமருந்து தடுப்புச் சட்டத்தால் தடை செய்யப்பட்ட குளோர்டாலிடோனை அவர் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து அவருக்கு மூன்று மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையால் அவர் T20 ஆசியக்கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பையில் கலந்து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


