போலி வாக்காளர்களை களைய தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை எந்த அளவுக்கு சேர்த்திருக்கிறார்கள் என்பது பற்றி கடந்த சில மாதங்களாக அனைத்து எதிர்கட்சிகளும் ஆதாரப்பூர்வமாக புள்ளி விவரங்களோடு எடுத்துச் சொல்லி வருகிறோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் இது பற்றிய பல புகார் மனுக்கள் தேர்தல் ஆணையரிடம் தரப்பட்டுள்ளதாக கருணாநிதி தெரிவித்துள்ளார். தேர்தல் வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையம் இந்தப் பிரச்சினையிலே முறையாக உரிய கவனம் செலுத்தி, போலி வாக்காளர்கள் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கேட்டுக் கொண்டுள்ளார்.


