பொங்கலுக்காக… கொத்து மஞ்சள் அறுவடை தீவிரம்!

manjal aruvadai turmeric for pongal - 2026

தை திருநாளை முன்னிட்டு மதுரை பாலமேடு பகுதியில் கொத்து மஞ்சள் அறுவடை தீவிரம்

தை திருநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கொத்து மஞ்சள் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம், பாலமேடு அருகே அய்யூர் எர்ரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கொத்துமஞ்சள் அதிக அளவில் பயிரிடப்பட்டு தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது.

இது குறித்து, கொத்து மஞ்சள் அறுவடை செய்யும் விவசாயிகள் கூறுகையில்:
தைத்திருநாளை முன்னிட்டு , வருடம் தோறும் கொத்து மஞ்சள் நடவு செய்து மார்கழி 25ஆம் தேதிக்கு பிறகு அறுவடை நடைபெறும் தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது ஆடி மாசம் பயிரிடுவோம் ஒரு ஏக்கர் கொத்து மஞ்சள் பயிரிடுவதற்கு 45 ஆயிரம் செலவு செய்கிறோம் அறுவடை செய்த கொத்து மஞ்சள் ஏக்கர் ஒரு லட்சம் முதல் ஒன்னறை லட்சம் வரை விலை போகும் ஆகையால் , இதில் நல்ல லாபம் உள்ளது .

மதுரை மாவட்டத்தின் பல பகுதிகள் மற்றும் பாம்பே உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கிறோம் மழை நேரங்களில் நோய் திரும்பத் தாக்கினால் மகசூல் குறையும் வாய்ப்பு உள்ளது அப்போது எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கொத்து மஞ்சள் மகசூல் குறைவாகவே உள்ளது

பொங்கல் தொகுப்பில் கொத்து மஞ்சள் கொடுத்திருந்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

கரும்புடன் சேர்த்து கொத்து மஞ்சள் கொடுத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஒரு நேரம் மகசூல் அதிகம் கிடைக்கும் ஒரு நேரம் விளைச்சல் குறைவாக இருக்கும் நேரத்தில் நஷ்டம் ஏற்படும் பொங்கள் தொகுப்பில் கொத்துமஞ்சள் கொடுத்திருந்தால் நஷ்டத்தை சரி கட்டி இருப்போம்

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வீட்டில் பொங்கல் வைக்கும் அனைவரும் கொத்து மஞ்சள் இல்லாமல் பொங்கல் வைக்க மாட்டார்கள் ஆகையால், பொங்கலுக்கு கொத்துமஞ்சள் மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது இவ்வாறு  கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories