பிரயாக்ராஜில் களைகட்டிய மகாகும்பமேளா; முதல் நாள் காலையிலேயே 60 லட்சம் பேர் புனித நீராடல்!

2025 kumbamela - 2026

மஹா கும்பமேளா முதல் நாள் காலை 8.00 மணிக்கே சுமார் 35 லட்சம் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். காலை 9.30 மணி அளவில் 60 லட்சம் பேர் புனித நீராடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில் இன்று மகா கும்பமேளா தொடங்கியது. இன்று காலையிலேயே சுமார் 60 லட்சம் பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். 

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில், மஹா கும்பமேளா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. இதை அடுத்து பிரயாக்ராஜ் நகரே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த மகாகும்பமேளா, ஜன.13ம் தேதி இன்று தொடங்கி பிப்.26 மஹாசிவராத்திரி நாள் வரை 44 நாட்களுக்கு நடைபெறுகிறது.

மஹாகும்பமேளாவின் சிறப்பு:

பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடத்தப்படும். 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிட்ட சில கிரகங்கள் நேர்கோட்டில் வரும்போது மகா கும்பமேளா நடக்கும். அத்தகைய சிறப்பு வாய்ந்த மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் என்பதால், இன்று தொடங்கியுள்ள மஹாகும்பமேளாவுக்கு, வாழ்நாளில் ஒருமுறை தான் வரும் என்பதால் அதிக அளவிலான அன்பர்கள் சிரத்தையுடன் வந்து குவிந்துள்ளனர். 

உலகம் முழுவதும் இருந்து பல கோடி பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 40 கோடி பேர் இந்த மகா கும்பமேளாவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்து, விழாவுக்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டிருந்தார். 

இந்த மகா கும்பமேளாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுத்தல் உள்ளிட்டவற்றை உத்தரப் பிரதேச அரசு தீவிரமாக செய்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். 

திரிவேணி சங்கமத்தில், காலை 9.30 மணி வரை 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடி மகிழ்ந்தனர். இதனால் விழாக்கோலம் பூண்டுள்ளது.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

பல்வேறு ஆன்மீக அம்சங்களுடன், கலாசார, சுற்றுலா விழாவாக கும்பமேளா திகழ்கிறது.  கும்பமேளா நடைபெறும் நாட்களில் பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை ஹிந்துக்கள் புனிதமாகக் கருதுகிறார்கள்.

கும்பமேளாவுக்கு வந்துள்ள ரஷ்யநாட்டைச் சேர்ந்த பெண்மணி குறிப்பிடுகையில், மேரா பாரத் மஹான். இந்தியா மிகச் சிறப்பான தேசம். நாங்கள் இங்கே கும்பமேளாவுக்கு முதல்முறையாக வந்துள்ளோம். இங்கே இந்தியாவின் உண்மையான முகத்தைப் பார்க்கிறோம். இந்தியாவின் உண்மையான சக்தி இம்மக்களிடம் உள்ளது. இங்கே புனிதமான இடத்தில் மக்களிடம் காணும் உற்சாகத்தைக் கண்டு சிலிர்க்கிறேன். இந்தியாவை நேசிக்கிறேன்… என்று அவர் குறிப்பிட்டார். 

மஹாகும்பமேளா ஏற்பாடுகள் குறித்து பிரெஞ்சு பத்திரிகையாளர்  மிலானி கூறியபோது… கும்பமேளா நிகழ்ச்சி பற்றி கேள்விப்பட்டேன். நான் இப்போதுதான் முதல்முறையாக வந்துள்ளேன். நிகழ்ச்சி ஏற்பாடுகள் மிகவும் நன்றாக இருக்கிறது. சாதுக்கள் மற்றும் ஆன்மீக குருக்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி… என்றார்.

இந்துக்கள் மட்டுமல்லாது உலகெங்கிலும் இருந்து வந்துள்ள பெருவாரியான மக்களும் இன்று காலை திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.    

பிரயாக்ராஜ் கும்பமேளா:

உலகின் மிகப் பெரிய விழாவாகவும், அதிகமான மக்கள் கூடும் விழாவாகவும் யுனெஸ்கோவால் அங்கிகரிக்கப்பட்டுள்ள விழா இந்தியாவின் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா தான். சன்னியாசிகள், துறவிகள், சாமானிய மக்கள். ஆண்கள், பெண்கள், வேத பண்டிதர்கள் என கோடிக் கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் திருவிழாவாக கும்பமேளா கருதப்படுகிறது. கும்பமேளா திருவிழா ஹரித்வார், பிரயாக்ராஜ், உஜ்ஜைனி மற்றும் நாசிக் ஆகிய நான்கு இடங்களில் தான் நடத்தப்படும். இருந்தாலும் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா தான் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

கும்பமேளா வகைகள் :

மொத்தம் நான்கு வகையான கும்பமேளாக்கள் உள்ளன. அதாவது ஆர்த் கும்மேளா, பூர்ண கும்பமேளா, மக் கும்பமேளா மற்றும் மகா கும்பமேளா உள்ளன. இவை ஒவ்வொன்றிற்கும் வித்தியாசம் உள்ளது.

* ஆர்த் கும்பமேளா – 6 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுவது. இது ஹரித்வார் மற்றும் பிரயாக்ராஜில் நடத்தப்படும்.

* பூர்ண கும்பமேளா – இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹரித்வார், பிரயாக்ராஜ், நாசிக், உஜ்ஜைனி ஆகிய நான்கு இடங்களிலும் நடத்தப்படும்.

* மக் கும்பமேளா – இது ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படும். இது பிரயாக்ராஜில் மட்டுமே நடத்தப்படும். இதை சேட்டா கும்பமேளா என்றும் சொல்லுவதுண்டு.

* மகா கும்பமேளா – இது தான் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது. 12 பூர்ண கும்பமேளாக்களுக்கு பிறகு நடத்தப்படும். இது பிரயாக்ராஜில் மட்டுமே நடத்தப்படும்.

கும்பமேளா தோன்றிய வரலாறு:

அமிர்தத்தை பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது பல்வேறு தெய்வீக தன்மை கொண்ட பொருட்களைத் தொடர்ந்து அமிர்தம் கிடைத்தது. அது அசுரர்களுக்கு கிடைத்து விடக் கூடாது என்பதற்காக மகாவிஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து அமிர்த கலசத்தை (கும்பம்) எடுத்துச் சென்றார். அப்போது அமிர்தத்தின் சில துளிகள் பூமியில் சிந்தி, அவைகள் ஹரித்வார், பிரயாக்ராஜ், உஜ்ஜைனி, காசி ஆகிய நான்கு புனித நகரங்கள் தோன்றிய. இதன் நினைவாக கொண்டாடப்படுவதே கும்மேளா ஆகும். கும்பமேளா அன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது மிக மிக சிறப்பானதாகும்.

மகா கும்பமேளா 2025 தேதி :

மகர சங்கராந்தி துவங்கி, மகா சிவராத்திரி வரையிலான 44 நாட்கள் இந்த மகா கும்பமேளா நடத்தப்படும். நவகிரகங்களில் சில குறிப்பிட்ட சுப கிரகங்கள், நட்சத்திரங்கள் ஒரே நாளில் ஒரே நேர்க்கோட்டில் இணையும் நாளிலேயே இந்த மகா கும்பமேளா நடத்தப்படும். அப்படி ஒரு அற்புதமான நாள் இந்த ஆண்டு வர உள்ளது. ஜனவரி 13ம் தேதி துவங்கி, பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறும் மகா கும்பமேளாவின் போது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் அனைத்து விதமான பாவங்களும் நீங்கும். மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

மகா கும்பமேளா 2025 நிகழ்வுகள் :

மகா கும்பமேளாவின் போது பலவிதமான சடங்குகள் நடத்தப்படும். யானைகள், குதுிரைகள், ரதங்கள், மின்னும் வாள்கள் ஆகியவற்றிற்கு பூஜை செய்து ஊர்வலமாக எடுத்து செல்வார்கள். ஜனவரி 13ம் தேதி பெளர்ணமி ஸ்நானத்துடன் துவங்கும் மகா கும்பமேளாவில் ஜனவரி 15ம் தேதி மகர சங்கராந்தி ஸ்நானம், ஜனவரி 29ல் அமாவாசை ஸ்நானம், பிப்ரவரி 3ல் வசந்த பஞ்சமி ஸ்நானம், பிப்ரரவரி 12ல் மகி பெளர்ணமி ஸ்நானம், பிப்ரவரி 26ம் தேதி மகா சிவராத்திரி ஸ்நானம் ஆகியவற்றுடன் மகா கும்பமேளா இந்த ஆண்டு நிறைவடைய உள்ளது.

கும்பமேளாவில் கலந்து கொள்ள முடியாதவர்கள் செய்ய வேண்டியது :

இந்த ஆண்டு மகா கும்பமேளாவில் 35 முதல் 40 கோடி வரையிலான மக்கள் கலந்து கொள்வார்கள் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அகோரிகளும், சாதுக்களும், துறவிகளும் பிரயாக்ராஜில் குவிய துவங்கி விட்டனர். கலாச்சார நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், உணவு கடைகள் என கோலாகலமாக நடைபெற உள்ள மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு கோடிக்கணக்கானவர்கள் புனித நீராட உள்ளனர். இதனால் பிரயாக்ராஜ் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள், கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. 144 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு நாமும் புனித நீராடினால் நம்முடைய பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரயாக்ராஜ் செல்ல முடியாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள புனித நதிகள், திரிவேணி சங்கமங்களில் புனித நீராடி, மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட பலனை பெறலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories