பொள்ளாச்சி விவகாரம்: சபரிகிரீசன் மீது வழக்குப் பதிவு!

Published:

pollachi jayaraman - 2026

தமிழகத்தில் மட்டுமல்ல நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பொள்ளாச்சி பாலியல் குற்ற விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் பெயரில், போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் தேர்தல் நேரம் என்பதால் தேர்தல் ஆதாயம் கருதி திமுக தனது ஐடி குழு மூலம் தன்னைக் குறித்து அவதூறு பரப்பி வருவதாக பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரில் திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சமூக வலைதளங்களில் தன் மீது அவதூறான கருத்துகளை பரப்புவதாக புகார் செய்திருந்தார்.

பொள்ளாச்சி சம்பவத்தில் தன் குடும்பத்தை இணைத்து பொய்யான தகவலை பரப்பினார் எனவும் புகார் அளித்திருக்கிறார்.

இதற்கிடையில் பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் அரசாணையில் இடம் பெற்றுள்ளது  என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தராமல் இருக்க மறைமுக அச்சுறுத்தல் இது; குற்றவாளிகளை காப்பாற்ற அரசு நாடகம் ஆடுவதாகவும் ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறியிருக்கிறார்.

Related articles

Recent articles

spot_img