சிவகங்கை வேட்பாளர் இன்றே அறிவிக்கப் படுவார்…! ஏன் தாமதம் என அழகிரி விளக்கம்!

KSAlagiri - 2026

சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படுவார் என்று கூறிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, வேட்பாளர் அறிவிப்பில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும் கோடிட்டுக் காட்டினார்.

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 8 தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டனர். ஆனால், நட்சத்திரத் தொகுதியான சிவகங்கைக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப் படவில்லை.

முன்னதாக, தமிழகத்தில் காங்கிரஸ் போட்டி யிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய ப.சிதம்பரத்தின் தில்லி வீட்டில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் காரசார விவாதங்கள் நடைபெற்றுள்ளன. விவாதத்தின் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து, ப.சிதம்பரம் மிகவும் சீரியஸ் ஆனதாகவும் சொல்லப் படுகிறது.

இந்நிலையில், கூட்டம் முடிந்த சற்று நேரத்துக்கெல்லாம் வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டது. அந்தப் பட்டியலில், சிவகங்கை தொகுதி வேட்பாளர் பெயர் மட்டும் இடம்பெறவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் சுதர்சன நாச்சியப்பன் தொகுதியைக் கேட்டிருப்பதாகக் கூறப் பட்டது. அதே நேரம், ப.சிதம்பரம் தன் மகனுக்காக முரண்டு பிடித்து வந்தார். எனவே இந்த இருவரில் யார் வேட்பாளர் என்று இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இதனிடையே காரைக்குடி முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் புஷ்பராஜின் மகன் டாக்டர் அருண் ஆகியோர் பெயரும் வேட்பாளர் பட்டியலில் பரிசீலனையில் உள்ளதாம்.

இந்நிலையில் கே.எஸ்.அழகிரி மற்றும் 9 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்களும் இன்று திமுக அலுவலகத்தில் ஸ்டாலினைச் சந்தித்னர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ”சிவகங்கை தொகுதிக்கு இன்று மாலைக்குள் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories