சிவகங்கை வேட்பாளர் இன்றே அறிவிக்கப் படுவார்…! ஏன் தாமதம் என அழகிரி விளக்கம்!

KSAlagiri - 2026

சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படுவார் என்று கூறிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, வேட்பாளர் அறிவிப்பில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும் கோடிட்டுக் காட்டினார்.

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 8 தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டனர். ஆனால், நட்சத்திரத் தொகுதியான சிவகங்கைக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப் படவில்லை.

முன்னதாக, தமிழகத்தில் காங்கிரஸ் போட்டி யிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய ப.சிதம்பரத்தின் தில்லி வீட்டில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் காரசார விவாதங்கள் நடைபெற்றுள்ளன. விவாதத்தின் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து, ப.சிதம்பரம் மிகவும் சீரியஸ் ஆனதாகவும் சொல்லப் படுகிறது.

இந்நிலையில், கூட்டம் முடிந்த சற்று நேரத்துக்கெல்லாம் வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டது. அந்தப் பட்டியலில், சிவகங்கை தொகுதி வேட்பாளர் பெயர் மட்டும் இடம்பெறவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் சுதர்சன நாச்சியப்பன் தொகுதியைக் கேட்டிருப்பதாகக் கூறப் பட்டது. அதே நேரம், ப.சிதம்பரம் தன் மகனுக்காக முரண்டு பிடித்து வந்தார். எனவே இந்த இருவரில் யார் வேட்பாளர் என்று இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இதனிடையே காரைக்குடி முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் புஷ்பராஜின் மகன் டாக்டர் அருண் ஆகியோர் பெயரும் வேட்பாளர் பட்டியலில் பரிசீலனையில் உள்ளதாம்.

இந்நிலையில் கே.எஸ்.அழகிரி மற்றும் 9 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்களும் இன்று திமுக அலுவலகத்தில் ஸ்டாலினைச் சந்தித்னர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ”சிவகங்கை தொகுதிக்கு இன்று மாலைக்குள் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories