December 5, 2025, 11:46 PM
26.6 C
Chennai

சிவகங்கை வேட்பாளர் இன்றே அறிவிக்கப் படுவார்…! ஏன் தாமதம் என அழகிரி விளக்கம்!

KSAlagiri - 2025

சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படுவார் என்று கூறிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, வேட்பாளர் அறிவிப்பில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும் கோடிட்டுக் காட்டினார்.

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 8 தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டனர். ஆனால், நட்சத்திரத் தொகுதியான சிவகங்கைக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப் படவில்லை.

முன்னதாக, தமிழகத்தில் காங்கிரஸ் போட்டி யிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய ப.சிதம்பரத்தின் தில்லி வீட்டில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் காரசார விவாதங்கள் நடைபெற்றுள்ளன. விவாதத்தின் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து, ப.சிதம்பரம் மிகவும் சீரியஸ் ஆனதாகவும் சொல்லப் படுகிறது.

இந்நிலையில், கூட்டம் முடிந்த சற்று நேரத்துக்கெல்லாம் வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டது. அந்தப் பட்டியலில், சிவகங்கை தொகுதி வேட்பாளர் பெயர் மட்டும் இடம்பெறவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் சுதர்சன நாச்சியப்பன் தொகுதியைக் கேட்டிருப்பதாகக் கூறப் பட்டது. அதே நேரம், ப.சிதம்பரம் தன் மகனுக்காக முரண்டு பிடித்து வந்தார். எனவே இந்த இருவரில் யார் வேட்பாளர் என்று இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இதனிடையே காரைக்குடி முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் புஷ்பராஜின் மகன் டாக்டர் அருண் ஆகியோர் பெயரும் வேட்பாளர் பட்டியலில் பரிசீலனையில் உள்ளதாம்.

இந்நிலையில் கே.எஸ்.அழகிரி மற்றும் 9 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்களும் இன்று திமுக அலுவலகத்தில் ஸ்டாலினைச் சந்தித்னர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ”சிவகங்கை தொகுதிக்கு இன்று மாலைக்குள் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories