இரு பிரிவாகி… தமிழிசை, கனிமொழி இருவருக்கும் வேலை செய்யும் நாடார் கட்சி!

venktehpannaiyar radhikaselvi - 2026

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் பெரும்பாலும் கோலோச்சுவது, திமுக., அதிமுக., பாரம்பரிய ஆட்கள் தான். பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன் என்று ஒரு காலத்தில் மோதிக் கொண்டவர்கள் இன்று ஒரே கட்சியில்!

இடையில், பசுபதிபாண்டியன், வெங்கடேச பண்ணையார் என்று சாதிக் குழுக்களுக்கு இடையேயான தகராறு! தொடர்ந்து இருவரும் கொல்லப்பட்டனர். நாடார் குழுவை திறம்பட ஒருங்கிணைத்து வந்த வெங்கடேச பண்ணையார் மரணத்துக்கு அதிமுக., தான் காரணம் என்று நாடார் இயக்கம் குற்றம் சாட்ட, அவரது மனைவி ராதிகா செல்வி நீதி கேட்டு நீதிமன்றத்தை அணுக… இடையில் திமுக., ராதிகா செல்விக்கு தளம் அமைத்துக் கொடுத்து தேர்தலில் நின்று வெற்றி பெற்று அமைச்சர் ஆகி… பின்னாளில் வெங்கடேச பண்ணையார் மரணம் விவகாரத்தில் பழிவாங்கல் படலத்தை மறந்தே போனார் என்று நாடார் அமைப்பு கொதித்தெழ…

இப்படி அரசியல் சாதிக் கட்சிகளைச் சுற்றியே சுழன்றுகொண்டிருக்க… இப்போது நாடார் சமூகத்தைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் மற்றும் சிலர் சேர்ந்து பனங்காட்டு மக்கள் கழகம் என்ற கட்சியை அண்மையில் துவக்கினார்கள்!

அவர்கள் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தனர்! காரணம், ராதிகா செல்வி. ஆனால், வெங்கடேச பண்ணையார் என்கவுண்டர் விவகாரத்தில் எதுவும் செய்யாமல் அரசியலுக்காக எல்லாவற்றையும் மறந்து விட்டார் என்ற குற்றச்சாட்டுடன் ராதிகாசெல்வியையே விமர்சனம் செய்து வந்த  அந்தக் கட்சியிலிருந்த சிலருக்கு, திமுக., ஆதரவு என்பதும் கனிமொழிக்காக வேலை செய்வதும் பிடிக்கவில்லை!

அவர்கள் அதிமுக., ஆதரவு பெற்ற கூட்டணியின் பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்! கட்சி துவங்கி சில நாள்களிலேயே கட்சி இரு பிரிவாகப் பிரிந்து, இரண்டு கட்சிகளுக்கு வேலை செய்து வருகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories