December 5, 2025, 3:16 PM
27.9 C
Chennai

கனிமொழியை வைத்து தூத்துக்குடி தொழில்களை வளைக்கும் திமுக.,!

kanimozhi campaign van - 2025கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிடுவது ஏன் தெரியுமா? – இப்படிப் பட்ட கேள்வியுடன் ஒரு வேண்டுகோள் பதிவு சமூகத் தளங்களில் சுற்றிச் சுற்றி வருகிறது.

திமுக.,வின் அடுத்த தலைமை பீடமாக கனிமொழி தான் இருப்பார் என்று காங்கிரஸின் தமிழகத் தலைவர் கே.எஸ். அழகிரி ஜாடைமாடையாக சொல்லியிருக்கிறார். சோனியா, மம்தாவுக்கு அடுத்து கனிமொழிதான் என்று அவர் கூறியிருப்பது இப்போது திமுக., வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படி ஒரு வாட்ஸ் அப் பதிவு ஒன்று வைரலாகி வருவது, திமுக.,வினரை பரபரப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.

அந்தப் பதிவு…

சென்னைக்கு ஸ்டாலின், கோவைக்கு மு க தமிழரசு, மதுரைக்கு அழகிரி, தூத்துக்குடிக்கு கனிமொழி.

தமிழ்நாட்டில் நான்கு தொழில் நகரங்கள். அதில் தூத்துக்குடி மட்டும் கருணாநிதி குடும்பம் கையில் அகப்படாமல் இருந்தது. ஏனென்றால் முரட்டு பக்தர் பெரியசாமி அண்ணாச்சி உயிரோடு இருந்தவரை கருணாநிதி குடும்பத்தால் அவரை அகற்ற முடியவில்லை. அவர் இறந்தது கனிமொழிக்கு கொண்டாட்டமாகிவிட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் கனிமொழி கண்ணை உறுத்திக்கொண்டே இருந்தது. அதனிடம் லஞ்சம் வாங்காத அரசியல்வாதிகள், சமூகப் போராளிகள் யாரும் கிடையாது. அது அள்ள அள்ள அள்ளிக் கொடுக்கும் காப்பர் சுரங்கம். அதில் வரும் வருமானம் நேரடியாக ஸ்டாலினுக்கே போகிறது. அதாவது அண்ணாச்சி குடும்பம் வழியாக போகிறது. கனிமொழி ஜெயித்துவிட்டால் இதில் வரும் வருமானம் முழுவதும் இனி கனிமொழிக்கே.

Kanimozhi A - 2025

தூத்துக்குடியில் சின்னச்சின்ன ரவுடிகள் (சமூக போராளிகள்) மட்டுமே தொழிலதிபர்களை மிரட்டி மாமுல் வாங்கிக் கொண்டிருந்தார்கள். இனி தூத்துக்குடிக்கு ஒரே ரவுடிதான். அவர் சொல்வதைத்தான் தொழில் அதிபர்கள் கேட்க வேண்டும். தொழிலாளிகள் கேட்க வேண்டும்.

திமுகவினர் தனக்கு பிடித்த நிலத்தை, வீட்டை கனிமொழியின் பேரைச் சொல்லி அபகரிப்பார்கள். கண்டிப்பாக தலைமைக்கு மாமுல் செல்ல வேண்டும். கட்டப் பஞ்சாயத்து அமோகமாக நடக்கும்.

குறிப்பாக கனிமொழி எல்லா தொழிலிலும் கூட்டு பங்குதாதராக இருப்பார். அவருக்கு வடதமிழகத்தைச் சேர்ந்த இருவர்தான் கையாளாக இருப்பர். அவர்கள்தான் எல்லா டீலையும் பேசி முடிப்பர். அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், கீதா ஜீவனுக்கும் அல்வாதான். அதனால்தான் ஆரத்தித் தட்டுக்கு பணத்தை அள்ளி அள்ளிப் போட்டு, வெளிப்படையாக தேர்தல் ஆணையத்தின் கண்ணில் அனிதா ராதாகிருஷ்ணன் காட்டிக் கொடுத்துப் பார்க்கிறார். ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை.

தூத்துக்குடியின் வளர்ச்சி என்பது வ உ சியின் காலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நூற்றாண்டு கால சீரான வளர்ச்சி. எல்லோரும் கோடீஸ்வரர் ஆகவில்லை யென்றாலும், அனைவருக்கும் ஒரு வேலை, வயிறார ஒரு வேளை கஞ்சி கிடைக்கிறது.

இந்தத் தொழில் நகரத்தை நாசமாக்க வேண்டுமா? நம்மை நாமே படுகுழியில் தள்ளிக் கொள்ள வேண்டுமா? யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைவிட, யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது!.

அன்புடன்

இந்த நகரத்தை நேசிப்பவன்

  • என்று சமூகத் தளங்களில் இந்த வேண்டுகோள்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories