கனிமொழியை வைத்து தூத்துக்குடி தொழில்களை வளைக்கும் திமுக.,!

kanimozhi campaign van - 2026கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிடுவது ஏன் தெரியுமா? – இப்படிப் பட்ட கேள்வியுடன் ஒரு வேண்டுகோள் பதிவு சமூகத் தளங்களில் சுற்றிச் சுற்றி வருகிறது.

திமுக.,வின் அடுத்த தலைமை பீடமாக கனிமொழி தான் இருப்பார் என்று காங்கிரஸின் தமிழகத் தலைவர் கே.எஸ். அழகிரி ஜாடைமாடையாக சொல்லியிருக்கிறார். சோனியா, மம்தாவுக்கு அடுத்து கனிமொழிதான் என்று அவர் கூறியிருப்பது இப்போது திமுக., வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படி ஒரு வாட்ஸ் அப் பதிவு ஒன்று வைரலாகி வருவது, திமுக.,வினரை பரபரப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.

அந்தப் பதிவு…

சென்னைக்கு ஸ்டாலின், கோவைக்கு மு க தமிழரசு, மதுரைக்கு அழகிரி, தூத்துக்குடிக்கு கனிமொழி.

தமிழ்நாட்டில் நான்கு தொழில் நகரங்கள். அதில் தூத்துக்குடி மட்டும் கருணாநிதி குடும்பம் கையில் அகப்படாமல் இருந்தது. ஏனென்றால் முரட்டு பக்தர் பெரியசாமி அண்ணாச்சி உயிரோடு இருந்தவரை கருணாநிதி குடும்பத்தால் அவரை அகற்ற முடியவில்லை. அவர் இறந்தது கனிமொழிக்கு கொண்டாட்டமாகிவிட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் கனிமொழி கண்ணை உறுத்திக்கொண்டே இருந்தது. அதனிடம் லஞ்சம் வாங்காத அரசியல்வாதிகள், சமூகப் போராளிகள் யாரும் கிடையாது. அது அள்ள அள்ள அள்ளிக் கொடுக்கும் காப்பர் சுரங்கம். அதில் வரும் வருமானம் நேரடியாக ஸ்டாலினுக்கே போகிறது. அதாவது அண்ணாச்சி குடும்பம் வழியாக போகிறது. கனிமொழி ஜெயித்துவிட்டால் இதில் வரும் வருமானம் முழுவதும் இனி கனிமொழிக்கே.

Kanimozhi A - 2026

தூத்துக்குடியில் சின்னச்சின்ன ரவுடிகள் (சமூக போராளிகள்) மட்டுமே தொழிலதிபர்களை மிரட்டி மாமுல் வாங்கிக் கொண்டிருந்தார்கள். இனி தூத்துக்குடிக்கு ஒரே ரவுடிதான். அவர் சொல்வதைத்தான் தொழில் அதிபர்கள் கேட்க வேண்டும். தொழிலாளிகள் கேட்க வேண்டும்.

திமுகவினர் தனக்கு பிடித்த நிலத்தை, வீட்டை கனிமொழியின் பேரைச் சொல்லி அபகரிப்பார்கள். கண்டிப்பாக தலைமைக்கு மாமுல் செல்ல வேண்டும். கட்டப் பஞ்சாயத்து அமோகமாக நடக்கும்.

குறிப்பாக கனிமொழி எல்லா தொழிலிலும் கூட்டு பங்குதாதராக இருப்பார். அவருக்கு வடதமிழகத்தைச் சேர்ந்த இருவர்தான் கையாளாக இருப்பர். அவர்கள்தான் எல்லா டீலையும் பேசி முடிப்பர். அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், கீதா ஜீவனுக்கும் அல்வாதான். அதனால்தான் ஆரத்தித் தட்டுக்கு பணத்தை அள்ளி அள்ளிப் போட்டு, வெளிப்படையாக தேர்தல் ஆணையத்தின் கண்ணில் அனிதா ராதாகிருஷ்ணன் காட்டிக் கொடுத்துப் பார்க்கிறார். ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை.

தூத்துக்குடியின் வளர்ச்சி என்பது வ உ சியின் காலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நூற்றாண்டு கால சீரான வளர்ச்சி. எல்லோரும் கோடீஸ்வரர் ஆகவில்லை யென்றாலும், அனைவருக்கும் ஒரு வேலை, வயிறார ஒரு வேளை கஞ்சி கிடைக்கிறது.

இந்தத் தொழில் நகரத்தை நாசமாக்க வேண்டுமா? நம்மை நாமே படுகுழியில் தள்ளிக் கொள்ள வேண்டுமா? யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைவிட, யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது!.

அன்புடன்

இந்த நகரத்தை நேசிப்பவன்

  • என்று சமூகத் தளங்களில் இந்த வேண்டுகோள்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories