கனிமொழியை வைத்து தூத்துக்குடி தொழில்களை வளைக்கும் திமுக.,!

kanimozhi campaign van - 2026கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிடுவது ஏன் தெரியுமா? – இப்படிப் பட்ட கேள்வியுடன் ஒரு வேண்டுகோள் பதிவு சமூகத் தளங்களில் சுற்றிச் சுற்றி வருகிறது.

திமுக.,வின் அடுத்த தலைமை பீடமாக கனிமொழி தான் இருப்பார் என்று காங்கிரஸின் தமிழகத் தலைவர் கே.எஸ். அழகிரி ஜாடைமாடையாக சொல்லியிருக்கிறார். சோனியா, மம்தாவுக்கு அடுத்து கனிமொழிதான் என்று அவர் கூறியிருப்பது இப்போது திமுக., வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படி ஒரு வாட்ஸ் அப் பதிவு ஒன்று வைரலாகி வருவது, திமுக.,வினரை பரபரப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.

அந்தப் பதிவு…

சென்னைக்கு ஸ்டாலின், கோவைக்கு மு க தமிழரசு, மதுரைக்கு அழகிரி, தூத்துக்குடிக்கு கனிமொழி.

தமிழ்நாட்டில் நான்கு தொழில் நகரங்கள். அதில் தூத்துக்குடி மட்டும் கருணாநிதி குடும்பம் கையில் அகப்படாமல் இருந்தது. ஏனென்றால் முரட்டு பக்தர் பெரியசாமி அண்ணாச்சி உயிரோடு இருந்தவரை கருணாநிதி குடும்பத்தால் அவரை அகற்ற முடியவில்லை. அவர் இறந்தது கனிமொழிக்கு கொண்டாட்டமாகிவிட்டது.

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் கனிமொழி கண்ணை உறுத்திக்கொண்டே இருந்தது. அதனிடம் லஞ்சம் வாங்காத அரசியல்வாதிகள், சமூகப் போராளிகள் யாரும் கிடையாது. அது அள்ள அள்ள அள்ளிக் கொடுக்கும் காப்பர் சுரங்கம். அதில் வரும் வருமானம் நேரடியாக ஸ்டாலினுக்கே போகிறது. அதாவது அண்ணாச்சி குடும்பம் வழியாக போகிறது. கனிமொழி ஜெயித்துவிட்டால் இதில் வரும் வருமானம் முழுவதும் இனி கனிமொழிக்கே.

Kanimozhi A - 2026

தூத்துக்குடியில் சின்னச்சின்ன ரவுடிகள் (சமூக போராளிகள்) மட்டுமே தொழிலதிபர்களை மிரட்டி மாமுல் வாங்கிக் கொண்டிருந்தார்கள். இனி தூத்துக்குடிக்கு ஒரே ரவுடிதான். அவர் சொல்வதைத்தான் தொழில் அதிபர்கள் கேட்க வேண்டும். தொழிலாளிகள் கேட்க வேண்டும்.

திமுகவினர் தனக்கு பிடித்த நிலத்தை, வீட்டை கனிமொழியின் பேரைச் சொல்லி அபகரிப்பார்கள். கண்டிப்பாக தலைமைக்கு மாமுல் செல்ல வேண்டும். கட்டப் பஞ்சாயத்து அமோகமாக நடக்கும்.

குறிப்பாக கனிமொழி எல்லா தொழிலிலும் கூட்டு பங்குதாதராக இருப்பார். அவருக்கு வடதமிழகத்தைச் சேர்ந்த இருவர்தான் கையாளாக இருப்பர். அவர்கள்தான் எல்லா டீலையும் பேசி முடிப்பர். அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், கீதா ஜீவனுக்கும் அல்வாதான். அதனால்தான் ஆரத்தித் தட்டுக்கு பணத்தை அள்ளி அள்ளிப் போட்டு, வெளிப்படையாக தேர்தல் ஆணையத்தின் கண்ணில் அனிதா ராதாகிருஷ்ணன் காட்டிக் கொடுத்துப் பார்க்கிறார். ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

தூத்துக்குடியின் வளர்ச்சி என்பது வ உ சியின் காலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நூற்றாண்டு கால சீரான வளர்ச்சி. எல்லோரும் கோடீஸ்வரர் ஆகவில்லை யென்றாலும், அனைவருக்கும் ஒரு வேலை, வயிறார ஒரு வேளை கஞ்சி கிடைக்கிறது.

இந்தத் தொழில் நகரத்தை நாசமாக்க வேண்டுமா? நம்மை நாமே படுகுழியில் தள்ளிக் கொள்ள வேண்டுமா? யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைவிட, யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது!.

அன்புடன்

இந்த நகரத்தை நேசிப்பவன்

  • என்று சமூகத் தளங்களில் இந்த வேண்டுகோள்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories