ஆந்திர என்கவுண்டரில் போலீஸார் கூறுவது நம்பும்படியாக இல்லை: முரளிதர் ராவ்

சென்னை: ஆந்திர என்கவுண்டரில் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், போலீசார் கூறுவது நம்பும்படியாக இல்லை என்று கூறியுள்ளார் பாஜக பொதுச் செயலர் முரளிதர் ராவ். பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், ஆந்திராவில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து…? பாஜக கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, அந்த சம்பவத்திற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆந்திர போலீசார் தற்காப்புக்காக கொலை செய்ததாகக் கூறுவது நம்பும்படியாக இல்லை. உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. இந்த விஷயத்தில் ஆந்திர அரசு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றார். மேகதாது குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வருவது குறித்துக் கேட்டபோது, மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்றும், இது தொடர்பாக, தமிழக விவசாயிகள் கொண்டுள்ள கவலையில் நியாயம் உள்ளது. பா.ஜ.க. இந்த விவகாரத்தில் சரியான நிலைப்பாட்டை எடுக்கும் என்றும் கூறினார். . நிலம் கையகப்படுத்தும் மசோதாவை பா.ஜ.க.வில் உள்ள கூட்டணி கட்சிகளே எதிர்த்த நிலையில் அ.தி.மு.க. ஆதரித்துள்ளதே? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த முரளிதர் ராவ், இந்த மசோதாவில் உள்ள நன்மையை கருதி அ.தி.மு.க. ஆதரித்தது. பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சிவசேனா உள்ளிட்ட கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அ.தி.மு.க. ஆதரித்தது. என்றாலும், அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே நட்பு எதுவும் கிடையாது. எங்கள் கூட்டணியிலும் அவர்கள் இல்லை என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Entertainment News

Popular Categories