சென்னை: அதிகாரிகள் கொடுத்த நெருக்கடியால், மன உளைச்சல் தாளாமல், சென்னை வண்ணாரப்பேட்டையில் நியாயவிலைக் கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் கூறியது…. சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் மாடர்ன் லைன் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த வே.இளங்கோவன்(50) எர்ணாவூர் ஜெ.ஜெ.நகரில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் எடையாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், இளங்கோவன் வியாழக்கிழமை திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்தனர். அப்போது இளங்கோவன் எழுதியதாக ஒரு கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில் சில தகவல்கள் தெரியவந்ததாக் போலீஸார் கூறினர். சில நாட்களுக்கு முன் இளங்கோவன் பணிபுரியும் கடையில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியபோது, அங்கே பொருள்களின் இருப்பு குறைவாக இருப்பதும், பொருள்கள் வாங்க வந்த பலருக்கு இளங்கோவன் ரசீது வழங்காமல் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இளங்கோவன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே அதிகமாக மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்த இளங்கோவன் குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி, குழந்தைகளைப் பிரிந்து தனது தம்பி கௌதமனோடு வசித்து வந்தார். இந்நிலையில் மன அழுத்தம் தாளாமல் இளங்கோவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இளங்கோவன் எழுதியதாகக் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையைத் தொடர்ந்து, அவர்கள் கொடுத்த நெருக்கடியால் மன உளைச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இளங்கோவனை பணியிடைநீக்கம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நியாய விலைக் கடை ஊழியர்கள் வெள்ளிக்கிழமை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Less than 1 min.Read
அதிகாரிகள் நெருக்கடி: ரேஷன் கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.
உரத்த சிந்தனை
கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!
முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...
அரசியல்
அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

