புது தில்லி: திருநங்கைகளுக்கு சமூகத்தில் சம உரிமை அளிக்கும் தனி நபர் மசோதாவுக்கு நேற்று மாநிலங்களவை ஒப்புதல் அளித்தது. மாநிலங்களவையில் கடந்த மார்ச் மாதத்தில் திருநங்கைகளுக்கு சம உரிமை வழங்கும் தனிநபர் மசோதாவை திருச்சி சிவா தாக்கல் செய்தார். அப்போது நடைபெற்ற விவாதத்தில் பல உறுப்பினர்களும் இந்த மசோதாவை ஆதரித்தனர். சமூகத்தில் சுமுகமான முறையில் திருநங்கைகளும் தங்கள் வாழ்வை மேற்கொள்ளும் வகையில், ஆண்கள் மற்றும் பெண்களை போலவே திருநங்கைகளுக்கும் சமூகத்தில் சம உரிமை வழங்க வேண்டும். அவர்களின் வாழ்க்கைக்கான உரிமை, தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாத்தல், உடல் மற்றும் மனரீதியான கொடுமைகளில் இருந்து அவர்களைப் பாதுகாப்பது, அவர்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பது, கவுரவமான வசிப்பிடங்கள் மற்றும் அவர்களுக்கான குடும்பங்களை அமைப்பதற்கான உரிமை, கருத்து சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளது. இந்த தனி நபர் மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையின் நேற்று நடைபெற்றபோது, சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், ‘‘இந்தப் பிரச்னையில் பல்வேறு அமைச்சகங்களில் விளக்கத்தையும், உச்ச நீதிமன்றத்தின் கருத்தையும் கேட்க வேண்டியுள்ளது. அரசு இதற்கு ஆதரவாகவே உள்ளது. எனவே இதுதொடர்பாக ஒரு விரிவான சட்டத்தை கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கும். எனவே இப்போது இந்த தனிநபர் மசோதாவை உறுப்பினர் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்’’ என்றார். ஆனால் திருச்சி சிவா, ‘‘இதுதான் சரியான நேரம், எனவே அரசு பெருந்தன்மையுடன் இதை ஆதரிக்க வேண்டும்’’ என்றார். அப்போது நிதி அமைச்சர் அருண்ஜெட்லி குறுக்கிட்டுப் பேசிய போது, ‘‘இது முக்கியமான பிரச்னை. இதில் அவையில் கருத்து வேறுபாடு வேண்டாம். இந்த விவகாரத்தில் தொடர்புடைய அமைச்சர் இது தொடர்பாக சில அரசு சார் கொள்கைகளும், சட்டமும் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். இந்த அவை ஒப்புதல் கொடுப்பதால் இது சட்டமாகிவிடாது. இப்போதைக்கு இது ஒரு தீர்மானம் நிறைவேற்றுவது போலத்தான். இதில் 2 வழிகள் இருக்கிறது, ஒன்று அமைச்சர் கூறியதை சிவா ஒப்புக்கொள்வது, மற்றொன்று குரல் வாக்கெடுப்பு மூலம் சிவாவின் உணர்வுகளை எதிரொலிப்பது’’ என்றார். அதைத் தொடர்ந்து இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ‘திருநங்கைகள் உரிமைச் சட்டம் 2014’ என்ற பெயரிலான இந்தச் சட்டம் இனி நாடாளுமன்ற விவாதத்துக்கும் வாக்கெடுப்புக்கும் அனுப்பிவைக்கப்படும். நாடாளுமன்றத்திலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் இது அமலுக்கு வரும்.
Hot this week
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஆன்மிகச் செய்திகள்
பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!
மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
Entertainment News
Previous article

