புது தில்லி: திருநங்கைகளுக்கு சமூகத்தில் சம உரிமை அளிக்கும் தனி நபர் மசோதாவுக்கு நேற்று மாநிலங்களவை ஒப்புதல் அளித்தது. மாநிலங்களவையில் கடந்த மார்ச் மாதத்தில் திருநங்கைகளுக்கு சம உரிமை வழங்கும் தனிநபர் மசோதாவை திருச்சி சிவா தாக்கல் செய்தார். அப்போது நடைபெற்ற விவாதத்தில் பல உறுப்பினர்களும் இந்த மசோதாவை ஆதரித்தனர். சமூகத்தில் சுமுகமான முறையில் திருநங்கைகளும் தங்கள் வாழ்வை மேற்கொள்ளும் வகையில், ஆண்கள் மற்றும் பெண்களை போலவே திருநங்கைகளுக்கும் சமூகத்தில் சம உரிமை வழங்க வேண்டும். அவர்களின் வாழ்க்கைக்கான உரிமை, தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாத்தல், உடல் மற்றும் மனரீதியான கொடுமைகளில் இருந்து அவர்களைப் பாதுகாப்பது, அவர்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பது, கவுரவமான வசிப்பிடங்கள் மற்றும் அவர்களுக்கான குடும்பங்களை அமைப்பதற்கான உரிமை, கருத்து சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளது. இந்த தனி நபர் மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையின் நேற்று நடைபெற்றபோது, சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், ‘‘இந்தப் பிரச்னையில் பல்வேறு அமைச்சகங்களில் விளக்கத்தையும், உச்ச நீதிமன்றத்தின் கருத்தையும் கேட்க வேண்டியுள்ளது. அரசு இதற்கு ஆதரவாகவே உள்ளது. எனவே இதுதொடர்பாக ஒரு விரிவான சட்டத்தை கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கும். எனவே இப்போது இந்த தனிநபர் மசோதாவை உறுப்பினர் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்’’ என்றார். ஆனால் திருச்சி சிவா, ‘‘இதுதான் சரியான நேரம், எனவே அரசு பெருந்தன்மையுடன் இதை ஆதரிக்க வேண்டும்’’ என்றார். அப்போது நிதி அமைச்சர் அருண்ஜெட்லி குறுக்கிட்டுப் பேசிய போது, ‘‘இது முக்கியமான பிரச்னை. இதில் அவையில் கருத்து வேறுபாடு வேண்டாம். இந்த விவகாரத்தில் தொடர்புடைய அமைச்சர் இது தொடர்பாக சில அரசு சார் கொள்கைகளும், சட்டமும் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். இந்த அவை ஒப்புதல் கொடுப்பதால் இது சட்டமாகிவிடாது. இப்போதைக்கு இது ஒரு தீர்மானம் நிறைவேற்றுவது போலத்தான். இதில் 2 வழிகள் இருக்கிறது, ஒன்று அமைச்சர் கூறியதை சிவா ஒப்புக்கொள்வது, மற்றொன்று குரல் வாக்கெடுப்பு மூலம் சிவாவின் உணர்வுகளை எதிரொலிப்பது’’ என்றார். அதைத் தொடர்ந்து இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ‘திருநங்கைகள் உரிமைச் சட்டம் 2014’ என்ற பெயரிலான இந்தச் சட்டம் இனி நாடாளுமன்ற விவாதத்துக்கும் வாக்கெடுப்புக்கும் அனுப்பிவைக்கப்படும். நாடாளுமன்றத்திலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் இது அமலுக்கு வரும்.
Hot this week
மதுரை
மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!
மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.
கட்டுரைகள்
ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?
ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics
மதுரை
மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!
மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.
கட்டுரைகள்
ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?
ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!
இந்து முன்னணியின் மாநில பொதுக் குழு ஜூன் 21 ஞாயிறு இன்று,...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
Entertainment News
Previous article

