புது தில்லி: திருநங்கைகளுக்கு சமூகத்தில் சம உரிமை அளிக்கும் தனி நபர் மசோதாவுக்கு நேற்று மாநிலங்களவை ஒப்புதல் அளித்தது. மாநிலங்களவையில் கடந்த மார்ச் மாதத்தில் திருநங்கைகளுக்கு சம உரிமை வழங்கும் தனிநபர் மசோதாவை திருச்சி சிவா தாக்கல் செய்தார். அப்போது நடைபெற்ற விவாதத்தில் பல உறுப்பினர்களும் இந்த மசோதாவை ஆதரித்தனர். சமூகத்தில் சுமுகமான முறையில் திருநங்கைகளும் தங்கள் வாழ்வை மேற்கொள்ளும் வகையில், ஆண்கள் மற்றும் பெண்களை போலவே திருநங்கைகளுக்கும் சமூகத்தில் சம உரிமை வழங்க வேண்டும். அவர்களின் வாழ்க்கைக்கான உரிமை, தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாத்தல், உடல் மற்றும் மனரீதியான கொடுமைகளில் இருந்து அவர்களைப் பாதுகாப்பது, அவர்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பது, கவுரவமான வசிப்பிடங்கள் மற்றும் அவர்களுக்கான குடும்பங்களை அமைப்பதற்கான உரிமை, கருத்து சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளது. இந்த தனி நபர் மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையின் நேற்று நடைபெற்றபோது, சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், ‘‘இந்தப் பிரச்னையில் பல்வேறு அமைச்சகங்களில் விளக்கத்தையும், உச்ச நீதிமன்றத்தின் கருத்தையும் கேட்க வேண்டியுள்ளது. அரசு இதற்கு ஆதரவாகவே உள்ளது. எனவே இதுதொடர்பாக ஒரு விரிவான சட்டத்தை கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கும். எனவே இப்போது இந்த தனிநபர் மசோதாவை உறுப்பினர் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்’’ என்றார். ஆனால் திருச்சி சிவா, ‘‘இதுதான் சரியான நேரம், எனவே அரசு பெருந்தன்மையுடன் இதை ஆதரிக்க வேண்டும்’’ என்றார். அப்போது நிதி அமைச்சர் அருண்ஜெட்லி குறுக்கிட்டுப் பேசிய போது, ‘‘இது முக்கியமான பிரச்னை. இதில் அவையில் கருத்து வேறுபாடு வேண்டாம். இந்த விவகாரத்தில் தொடர்புடைய அமைச்சர் இது தொடர்பாக சில அரசு சார் கொள்கைகளும், சட்டமும் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். இந்த அவை ஒப்புதல் கொடுப்பதால் இது சட்டமாகிவிடாது. இப்போதைக்கு இது ஒரு தீர்மானம் நிறைவேற்றுவது போலத்தான். இதில் 2 வழிகள் இருக்கிறது, ஒன்று அமைச்சர் கூறியதை சிவா ஒப்புக்கொள்வது, மற்றொன்று குரல் வாக்கெடுப்பு மூலம் சிவாவின் உணர்வுகளை எதிரொலிப்பது’’ என்றார். அதைத் தொடர்ந்து இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ‘திருநங்கைகள் உரிமைச் சட்டம் 2014’ என்ற பெயரிலான இந்தச் சட்டம் இனி நாடாளுமன்ற விவாதத்துக்கும் வாக்கெடுப்புக்கும் அனுப்பிவைக்கப்படும். நாடாளுமன்றத்திலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் இது அமலுக்கு வரும்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!
தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!
தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.
Entertainment News
Previous article

