ஈஸ்டர் திருநாள்: உலகின் அதிக விலை கொண்ட ஈஸ்டர் முட்டை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

esteregg - 2026

உலகின் அதிக விலை கொண்ட ஈஸ்டர் முட்டை 50-க்கும் மேற்பட்ட அதிக விலை கொண்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த முட்டை ரஷ்யாவை சேர்ந்த ராயல் குடும்பத்திற்கு சொந்தமானது.

ஈஸ்டர் விடுமுறைக்காலம் அல்லது வசந்த காலத்தைக் கொண்டாடும் நோக்கோடு பரிசளிக்கபடும் விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட முட்டைகளே ஈஸ்டர் முட்டைகள் என்றழைக்கப்படுகின்றன.

பேகன் நம்பிக்கையைச் சார்ந்தவர்களின் கொண்டாட்டத்தில், பூமியின் மறுபிறப்பின் அடையாளமாக முட்டை நம்பப்படுகிறது, இதனை தழுவி ஆரம்பகால கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் மறுபிறப்பின் அடையாளமாக முட்டைகளை ஏற்றனர்.

பழங்கால வழக்கங்களில் சாயம் பூசப்பட்ட அடிக்கப்பட்ட அல்லது வண்ணம் பூசப்பட்ட முட்டைகள் பயன்படுத்தப்பட்டன, ஆனால் தற்கால வழக்கில், சாக்லெட் முட்டைகள், ஜெல்லி பீன்கள் போன்ற உண்ணக்கூடிய பொருட்களை உள்ளடக்கிய பிளாஸ்டிக் முட்டைகள் புழக்கத்திற்கு வந்துள்ளன. இந்த முட்டைகள், பெரும்பாலும் ஈஸ்டர் முயலால் தந்திரமாக மறைத்து வைக்கப்பட்டு, ஈஸ்டர் அன்று காலையில் குழந்தைகள் கண்டறியுமாறு வைக்கப்படும். இல்லையென்றால், அவை பொதுவாக புற்கள், வைக்கோல்களால் அலங்கரிக்கப்பட்ட பறவையின் கூடு போன்ற தோற்றத்தில் செய்யப்பட்ட கூடையில் வைக்கப்படுகின்றன.

முட்டையானது, ஒரு புதிய வாழ்வின் தொடக்கத்தின் அடையாளமாக பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது, ஒரு முட்டை அடைகாக்கப்பட்டு அதிலிருந்து புதிய கோழிக்குஞ்சு வெளிவருவது புது வாழ்வின் குறியீடாக இருக்கிறது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

பழங்கால ஜோரோஸ்டிரியன்கள், அவர்களுடைய புத்தாண்டு கொண்டாட்டமான நவ்ரூஸுக்காக முட்டைகள் மீது வண்ணம் பூசினார்கள், இந்த கொண்டாட்டம் வசந்தகால சம இரவுபகல் நாளில் நடக்கிறது. நவ்ரூஸ் பாரம்பரியம் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு நடைமுறையிலிருந்தது. ஜோரோஸ்டிரியன்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் காட்சிப்படுத்தப்படும், ஹாஃப்ட் சீன் என்பதில் அலங்கரிக்கப்பட்ட முட்டைகள் முக்கிய இடம் பிடிக்கின்றன. பெர்ஸெபோலிஸ் சுவர்களில் உள்ள சிற்பங்களில், நவ்ரூஸ் கொண்டாட்டத்தில் மன்னனுக்கென மக்கள் முட்டைகள் கொண்டு செல்வது போன்ற காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.

யூத இனப் பண்டிகையான பாஸ்ஓவர் செடர் என்பதில், வேக வைக்கப்பட்ட முட்டை உப்பு நீரில் முக்கப்பட்டு, ஜெருசலேம் கோயிலில் பண்டிகைக் கால காணிக்கையாகத் தரப்படுகிறது.

கிறிஸ்தவ சமயத்திற்கு முந்தைய, சாக்ஸோன்ஸ் என்ற மதத்தினர் இயோஸ்டர் என்ற வசந்தகால தேவதையை வணங்கினார்கள், இந்த தேவதையின் விருந்து, வசந்தகால சம இரவு பகல் நாளில் மார்ச் 21 -ஆம் தேதியை ஒட்டி நடத்தப்படுகிறது. இந்த தேவதையின் விலங்காக, வசந்தகால முயல் கருதப்படுகிறது. இயோஸ்டர் முட்டைகள் மற்றும் முயல்களுடன் இணைந்தது என்று சிலர் கூறுகின்றனர், மற்றும் வசந்தகாலத்தின் பூமி மீண்டும் பிறப்பது முட்டையால் அடையாளம் காட்டப்படுகிறது என்றும் நம்புகின்றனர்.[3] பீட் வெனராபிலிஸ் என்ற ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெனக்டிக்டைன் துறவி எழுதிய புத்தகங்களிலிருந்து இயோஸ்டர் தேவதையைப் பற்றி தெரியவருகிறது. ஆங்கிலோ-சாக்ஸோன்கள் இடையே நடந்த இயோஸ்டரின் பேகன் வழிபாடு முறைகள் இவர் எழுதத் தொடங்குவதற்கு முன்பே அழிந்து விட்டதாக பீட் என்பவர் கூறுகிறார். பீட் எழுதிய டி டெம்போரம் ரேஷனெ என்பது இந்த தேவதையுடைய பெயர் பண்டிகைக்கு சூட்டப்பட்டதை விவரிக்கிறது, ஆனால் முட்டைகளைப் பற்றி எந்த விவரங்களும் அதில் இல்லை.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜாக்கப் கிரிம் போன்றவர்களின் கருத்துப்படி, ஜெர்மானிய தேவதையான ஆஸ்டாரா என்பவர் மூலமாகத்தான் ஈஸ்டர் முட்டைகள் பேகன் நம்பிக்கையுடன் இணைந்தது என்று நம்பப்படுகிறது.

ஜெர்மானிய சொல்லான இயோஸ்டர் என்பதிலிருந்து இந்த விழாவுக்கான ஆங்கிலப் பெயர் ஈஸ்டர் என்பது மருவி வந்தது. ஜெர்மானிய மொழிகளில் மட்டும் இயோஸ்டர் என்பதன் மருவுகள் விடுமுறையைக் குறிக்கின்றன. பெரும்பாலான ஐரோப்பிய மொழிகள், ஹீப்ரூ பண்டிகையான கடந்து செல்லுதல் என்று பொருள்படும், பாஷ் என்பதிலிருந்து இதற்கான சொல்லப் பெற்றன. எடுத்துக்காட்டாக, ஸ்பானிஷ் மொழியில் பாஸ்குவா ; பிரெஞ்சில் பாக்வஸ் ; டச்சு மொழியில் பாசன் , கிரேக்கம், ரஷ்ய மறும் பெரும்பாலான கிழக்கத்திய பழமையான நாடுகளில், பாஷ்ஷா . இடைக்கால ஆங்கிலத்தில், இந்த சொல் பாஷ் என்றே அழைக்கப்பட்டன, இது நவீனகால ஒலிப்பு சார் சொற்களில் வைக்கப்பட்டுள்ளது. செர்பியன் உஸ்க்ர்ஸ் போன்ற சில மொழிகளில், உயிர்த்தெழுதல் என்று பொருள்படும் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

ஈஸ்டருக்காக முட்டைகளை வேக வைக்கும்போது, அவற்றுடன் வெங்காய சருகுகளைச் சேர்த்து வேக வைப்பதன் மூலம் சிவப்பு நிறத்தைப் பெற முடியும். வெவ்வேறு நிறமான உல்லன் நூற்கண்டுகளுடன், வெங்காய தோலைச் சேர்த்து கட்டுவதன் மூலம் பல வகைகளில் நிறங்கள் பெறப்படுகின்றன. இங்கிலாந்திற்கு வடக்கே இவற்றை பேஸ் முட்டைகள் அல்லது பேஸ்ட் முட்டைகள் என்று அழைக்கின்றனர், இது இடைக்கால ஆங்கில சொல்லான பேஸ்க் என்பதிலிருந்து தோன்றியது. இவை பெரும்பாலும் ஒரு முட்டை உடைத்தல் போட்டிக்கு பின்னர் உண்ணப்படுகின்றன.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

ஒலியெழுப்பும் ஈஸ்டர் முட்டைகள் என்பவை, பலவகையான கிளிக் மற்றும் இரைச்சல் சத்தங்களை வெளிவிடும் முட்டைகளாகும், இவற்றை கண்பார்வை இல்லாத சிறுவர்கள் எளிதாக கண்டறிய முடியும்.

சில ஒலியெழுப்பும் ஈஸ்டர் முட்டைகள் ஒரே, அதிக சத்தமான ஒலியை எழுப்புகின்றன, சிலவற்றில் இனிமையான ஒலி வெளிவிடப்படுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories