December 5, 2025, 11:46 PM
26.6 C
Chennai

மழை 69% குறைவு: பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்!

water may02 - 2025

சீரான முறையில் வழங்கப்பட்டு வரும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண் இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க 556 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டங்களின் மூலமாக 4 கோடியே 23 லட்சம் மக்கள் தினமும் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டங்களின் மூலம் நாளொன்றுக்கு 2 ஆயிரத்து 146 மில்லியன் லிட்டர்கள் குடிநீர் வழங்க வடிவமைக்கப் பட்டுள்ளது!

தற்சமயம், தமிழ்நாட்டின் மழை அளவு, வழக்கத்தை விட 69 விழுக்காடு குறைந்துள்ளதால், இந்த வருடம் சராசரியாக ஆயிரத்து 856 மில்லியன் லிட்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது.

குடிநீரானது கடைக்கோடி குடியிருப்புகள் வரை சென்றடைவதை உறுதிபடுத்திக்கொள்ள, தமிழகம் முழுவதும் வாரியத்தின் மூலம் 258 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குடிநீர் குழாய் கசிவு, மின் மோட்டார் பழுது ஆகியவற்றை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், உடைப்புகள், வீணாகும் குடிநீர், போன்றவை குறித்து 94458 02145 என்ற அலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குடிநீர் வடிகால் வாரியத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும், குடிநீர் தரப் பரிசோதனை கூடம் உள்ளது. அதில் பொதுமக்கள் குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்து கொள்ளலாம்!

கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழகத்தில் 960 மில்லி மீட்டர் பெய்ய வேண்டிய மழை 811.7 மில்லி மீட்டர் மட்டுமே பெய்தது! 2019 ஜனவரி முதல் மே வரை 108 மில்லி மீட்டர் பொழிய வேண்டிய மழை, 34 மில்லி மீட்டர் மட்டுமே பொழிந்துள்ளது.

தமிழகம் முழுவதும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு முறைகளை செயல்படுத்த தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

குடிநீரை பொதுமக்கள் அனைவரும் சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories