December 6, 2025, 5:44 AM
24.9 C
Chennai

அடடே… தி.மு.க. ஸ்டாலின் மீது இவ்வளவு நம்பிக்கையா உங்களுக்கு?!

20 July02 Narayanasamy - 2025

பாஜக.,வுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன் என்பதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவ்வாறு நிரூபிக்காவிட்டால் பிரதமர் மோடியும், தமிழிசை சவுந்தர்ராஜனும் அரசியலை விட்டு விலகத் தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சந்திரசேகர ராவ் மட்டுமல்ல, ராகுல்காந்தி, சந்திரபாபு நாயுடு என்று மட்டுமல்ல, மோடியுடனும் பேசிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின் என்று கூறினார் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். இதற்கு பதிலளித்துள்ள திமுக., தலைவர் ஸ்டாலின்,  நேற்று வெளியிட்ட அறிக்கையில்,

காங்கிரஸ் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதன்முதலில் அறிவித்தது திமுக.,தான்! பச்சைப்பொய் நிறைந்த பேட்டியை அளித்த தமிழிசை சவுந்தரரானுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்! தோல்வியின் விளிம்புக்குச் சென்றுள்ள பாஜக.,வுக்கு இதுபோன்ற குழப்பங்களை ஏற்படுத்துவது கைதேர்ந்த கலை!

பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன் என்ற திருமதி தமிழிசையின் “பச்சைப் பொய்”க்கு என் பதில் இதோ!

இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசை மே 23- ஆம் தேதிக்குப் பிறகு மாற்றிக் காட்டுவோம்! முதுகெலும்பில்லாத இந்த அ.தி.மு.க அரசைத் தூக்கியெறிவோம்! பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் இருந்து வந்துள்ள தமிழிசை சவுந்திரராஜன் பொய் பேட்டி அளித்திருப்பதற்காக வருத்தப்படுகிறேன் என்று அறிக்கையில் முக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இதனை திமுக., பாஜக.,வுக்கு இடையேயான அரசியல் என்று விட்டுவிடாமல், திமுக., தங்கள் கூட்டணியை விட்டுப் போய் விடுமோ என்ற கவலையில் உடனடியாக பதில் அளித்துள்ளனர் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

தமிழிசை சொல்வது வடிகட்டிய பொய் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.  பாஜகவுடன், திமுக பேச்சுவார்த்தை என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியது வடிகட்டிய பொய் என்று கூறியுள்ளார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.

தொடர்ந்து, குமரி ஆனந்தன் மகளே பொய் சொல்லக்கூடாது பாப்பா..! தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்!

ஸ்டாலின் கேபினட் அமைச்சர் தொடர்பாக பாஜகவுடன் பேசி வருவதாக தமிழிசை கூறியதற்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பொய்கள் பாஜகவின் மூலதனமாகிவிட்டது. பிரதமர் மோடி பொய்களை கூறியே அரசியல் நடத்தி வருகிறார். தங்கள் தலைவர் மோடியை போலவே தமிழிசையும் பொய் பேசி வருகிறார். தமிழிசை பொய்களை அடுக்கி வருகிறார். தமிழிசை உண்மையை பேச வேண்டும் என முத்தரசன் கூறியுள்ளார்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories