* ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து ஆர்.எல்.வி., விண்கலம் விண்ணில் பாய்ந்தது.
பூமியிலிருந்து 70 கி.மீ., தூரம் சென்றபின் வங்கக்கடலில் விழுந்தது. ஆர்.எல்.வி. விண்கலம் சோதனை வெற்றி பெற்றுள்ளது என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த விண்கலம் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரானது. ஐந்து ஆண்டுகளாக, இந்திய விஞ்ஞானிகளின் தீவிர முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள விண்கலம்,இதுபோன்ற விண்கலத்தை, இதுவரை அமெரிக்கா மட்டுமே பயன்படுத்தி வந்தது.
இந்தியா உருவாக்கியுள்ள இந்த விண்கலம், முதன்முறையாக இன்று விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



