சட்டம் கண்காணிப்பு இருந்தும்… ஒரே வருடத்தில் 62,500 குழந்தைத் திருமணங்கள்!

school children during awareness campaign - 2026

ஒரே வருடத்தில் 62,500 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளதாக வெளியான தகவல் சமூக ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 62,500 குழந்தை திருமணங்கள் நடைபெற்று உள்ளன என்று குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் கணக்கு தெரிவிக்கிறது.

பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது 18 என்றும், ஆண்களின் குறைந்த பட்ச திருமண வயது 21 என்றும் சொல்கிறது சட்டம்.  ஆனால், தமிழகத்தில் சமூக நல துறையினர், சமூக ஆர்வலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் இவர்களின் கண்காணிப்பையும் மீறி திருமண வயது எட்டாத பெண்கள் மற்றும் ஆண்களுக்கு திருமணம் நடைபெறுவது தொடர்ந்துகொண்டுதான் உள்ளது!

கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை மாவட்டத்தில் 5180, கோவையில் 3025, மதுரையில் 2840 என்று ஆயிரக்கணக்கான திருமணங்கள் தமிழகத்தின் முன்னேறிய மாவட்டங்களிலும் நடைபெறத்தான் செய்கின்றன.

இவ்வாறு 2017ல் மட்டும் தமிழகத்தில் 62,500 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று உள்ளன என்கிறது குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் கணக்கு.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

விழிப்பு உணர்வு இன்மை, கல்வி அறிவு இன்மை, ஏழ்மை, சொத்து மீதான ஆசை, குடும்பங்களுக்குள் உறவு விட்டுப் போகாமல் இருக்க, குடும்ப பிரச்னை  காரணமாக என்று பல்வேறு காரணங்கள் குழந்தை திருமணத்துக்காக கூறப்படுகின்றன

சிறிய வயதில் தாயாகும் பெண்ணுக்கும் அவரது குழந்தைக்கும் உடல் ரீதியாக பிரச்னைகள், ஊட்டச்சத்து பிரச்சினைகள் ஏற்படுகின்றன! மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கள், அந்தந்த மாவட்டங்களை குழந்தைத் திருமணம் நடைபெறாத மாவட்டமாக வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது!

இது தொடர்பாக, சமூக நலத்துறை அலுவலர்கள், குழந்தைகள் பாதுகாப்புக் குழுவினருக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கூட்டங்கள் நடத்தி அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்படி திருமண மண்டபங்கள், கோவில்கள், கிராமங்கள் உள்பட எந்தப் பகுதியிலாவது சட்டப்படி திருமண வயது எட்டாத பெண்களுக்கு திருமணம் நடப்பதாக தெரிய வந்தால் உடனடியாக அந்த மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்!

திருமண மண்டப உரிமையாளர்கள், கோயில் நிர்வாகத்தினர் தங்களிடத்தில் உரிய விசாரணை மற்றும் ஆவணங்கள் இல்லாமல் திருமணங்கள் நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறப் பட்டுள்ளது.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

சிறுவயது திருமணங்கள் மூலம் பெண் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்துக்கும் மனதுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்று அரசுத் துறைகளும் சமூக ஆர்வலர்களும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வந்தாலும், பல்வேறு காரணங்களால் வெளி உலகுக்குத் தெரியாமல் குழந்தைத் திருமணங்கள் நடப்பது வருந்தத் தக்கது; இந்தப் புள்ளி விவரம் அவ்வாறு நடைபெறுவதை வெளியுலகுக்கு உணர்த்துகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories