December 5, 2025, 6:09 PM
26.7 C
Chennai

செய்தி சுருக்கம் 28/5/16

பா.ஜனதா, காங்கிரஸ் இல்லாத மாநில கட்சிகள் ஒன்று சேர்ந்து புதிய அணி தொடங்க மம்தா பானர்ஜி உதவ முன் வந்துள்ளார்

 

கர்நாடக மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவுவதால் அங்கு இருந்து தமிழகத்துக்கு கோழிகள், முட்டைகள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் சோதனை சாவடிகளில் இருந்து திருப்பி அனுப்பப்படுகிறது

 

பிரதமர்-மக்கள் நிதி திட்டத்தின் கீழ் (ஜன்தன் யோஜனா) வங்கிக் கணக்குகளில் இதுவரை ரூ.37,617 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 22 கோடி கணக்குகளில் இந்த தொகை செலுத்தப்பட்டு இருக்கிறது

 

லண்டன் ஆஸ்பத்திரியில் இதய அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் விரைவில் பூரண குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார்

 

45 நாட்கள் நீடித்த மீன்பிடி தடைகாலம் நாளை நள்ளிரவுடன் முடிவடைகிறது. மீன்பிடிக்க செல்வதற்கான ஆயத்த பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

 

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்திய கடற்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய ராணுவ அமைச்சர்  மனோகர் பாரிக்கர் கூறி உள்ளார்.

 

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் தேதி பற்றி இந்திய தேர்தல் துணை கமிஷனருடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி டெல்லியில் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிகிறது 

 

டெல்லி மேல்-சபை, கர்நாடக மேல்-சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து சோனியா காந்தியை முதலமைச்சர் சித்தராமையா நேற்று சந்தித்து பேசி உள்ளார்.

 

பிரதமர் மோடி நாளை கர்நாடகம் வருகிறார். தாவணகெரேயில் நடைபெறும் பா.ஜனதா 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார். 

 

இரு நாட்டு உறவுகள் மேம்பட தீவிரவாத தடைக்கற்களை பாகிஸ்தான் தானாக அகற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

 

இந்தியாவுக்கு தப்பி செல்ல முயன்ற விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதி ஆதவன் மாஸ்டர் என்ற அய்யாத்துரை மோகன்தாஸ்  பயங்கரவாத தடுப்பு போலீசார் கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்தனர்.

 

மத்திய தரைக்கடல் அருகே அகதிகளின் படகு விபத்துக்குள்ளாதில், இதுவரை 45 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலி கடற்படை தெரிவித்துள்ளது. 

 

ராஜஸ்தானில் உள்ள ஏவுகணை சோதனை மண்டலத்தில் இருந்து விமானப்படை நடத்திய மிக அதிக வேகத்துடன் சென்று தாக்கும் பலம் வாய்ந்த இந்த சூப்பர்சானிக் (பிரமோஸ்)  ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது.

 

தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறை மற்றும் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 3½ கிலோ தங்க கட்டிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

 

மக்களவை சபாநயகருக்கு ஆடம்பரமான ஜாகுவார் கார் ஒதுக்கீடு செய்தது குறித்து சுமித்ரா மகாஜன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

 

முதலமைச்சர்  மம்தா பானர்ஜி பதவி ஏற்றுக் கொண்ட விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது பரூக் அப்துல்லா செல்போனில் பேசியதாக கூறப்படும் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது 

 

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் ராணுவ வீரர் ஒருவரும் பலியானார். 

 

2-வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட மம்தா பானர்ஜிக்கு பிரதமர் நரேந்திரமோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் ‘அக்னி’ நட்சத்திரம் இன்று விடைபெறுகிறது. இருந்தபோதிலும் மேலும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

 

பதான்கோட் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான தேசிய விசாரணைக் குழுவை பாகிஸ்தான் அனுமதிக்கவில்லை என்றால் அது நிச்சயம் நம்பிக்கை துரோகமாக தான் இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 

 

பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரை சேர்ந்த இளம்பெண்ணை காதலரும் அவரது நண்பர்கள் 30 பேரும் கும்பலாக சேர்ந்து கற்பழித்து சின்னாபின்னப்படுத்தியுள்ளனர்  

 

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு லண்டனில் வருகின்ற செவ்வாய்க்கிழமை திறந்த இதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

 

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்- அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

 

பிரதமர் ஜவகர்லால் நேரு குறித்து அண்மையில் முகநூலில் மறைமுகமாக புகழ்ந்து எழுதிய கலெக்டர் அஜய்சிங் காங்வாரை  அதிரடியாக மாற்ற மத்தியபிரதேச மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது 

 

ம்தா பானர்ஜி மீண்டும் முதலமைச்சர் பதவியேற்றுள்ள நிலையில், பதவியேற்பு விழாவில் புதிய அமைச்சர்கள் அவரது காலை தொட்டு ஆசிர்வாதம் வாங்கியுள்ளனர். 

 

சென்னை விமான நிலையத்தை செம்மைப்படுத்தவும், பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தவும் சிறப்பு குழு விரைவில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்ததுள்ளதாக விமான போக்குவரத்து துறை  அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ கூறியுள்ளார். 

 

9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், 2-வது தகுதி சுற்றில் வார்னரின் அதிரடி ஆட்டத்தால் குஜராத் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. 

 

சவுதியின் தலைநகரான ரியாத்தில் தனது மனைவி பிரசவத்தின் போது டாக்டர் மீது ஏற்பட்ட பொறாமையால் அவரை துப்பாக்கியால் சுட்ட கணவரிடம் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

 

தீவிரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பை ஐ.நா மற்றும் சர்வதேச அமைப்புகளில் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

 

வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் 6 நாள் அரசுமுறை பயணமாக ஜப்பானுக்கு  மத்திய  அமைச்சர் அருண்ஜெட்லி.  செல்கிறார்

 

இந்திய ரெயில்வே கடந்த சில ஆண்டுகளாக சிக்கலில் இருப்பதாகவும், ரெயில்வே துறையை அவசர சிகிக்சை பிரிவில் இருந்து மீட்க போராடிக் வருவதாக மத்திய ரெயில்வேத்துறை அமைச்சர்  சுரேஷ் பிரபு கூறியுள்ளார். 

 

குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரை கொலை செய்யும் உரிமை சாதாரண மனிதனுக்கு உள்ளது என்று அரியானா மாநில போலீஸ்( டிஜிபி )அதிகாரி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 

இரண்டாம் உலகப்போரின் போது மாயமான நீர்மூழ்கி போர்க்கப்பல் 73 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 71 உடல்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு பயணிகள் ரெயில் சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

 

ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதியில் நடந்த சண்டையின்போது, இந்திய ராணுவ வீரர் ஒருவர் மிகவும் துணிவுடன் போராடி 4 தீவிரவாதிகளை கொன்று தனது உயிரை தியாகம் செய்துள்ளார். 

 

புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள கிரண்பேடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு புதுவை கவர்னர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்கிறார்.

 

உலகம் முழுவதும் வரும் 2050-ம் ஆண்டுவாக்கில் ஆண்டுதோறும் ஒருகோடி பேரை கொல்லும் பாக்டீரியாவை கட்டுப்படுத்த மாற்றுமருந்து கண்டுபிடிக்க இயலாமல் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் திணறி வருகின்றனர். 

 

புதுக்கோட்டையில் பாலியல் புகாரில் கைதான சரத்குமார் விசாரணைக்கு ஆஜராகாமல் தப்பி ஓட்டம். இதில் கவனக்குறைவாக செயல்பட்டதாக போலீஸ்காரர்கள் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். 

 

கரூரில் நேற்று காலையில் மனைவி உயிரிழந்த நிலையில் மாலையில் கணவரின் உயிரும் பிரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

மாம்பழங்களை பழுக்க வைக்க கார்பைடு கல் பயன்படுத்தினால் 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த மண்ணிவாக்கத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பிலான 36 செம்மரக்கட்டைகள் பறிமுதல்

 

சென்னை-மைசூர் சென்ற சதாப்தி ரெயிலின் மேற்கூரை கிழிந்ததால் பயணிகள் அச்சம்

 

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories